மகளிர்க்கான விசேஷ தகவல்கள்! – மகளிர் மட்டும்
மகளிர்க்கான விசேஷ தகவல்கள்! – மகளிர் மட்டும்
ஆண் பெண் இருபாலாருக்கும் இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாகவு ம், மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக
தற்போது நிலவி வருகின்றது. பெண்ணை விட ஆணுக்குத் தான் இப்பிரச்சனை அதிகம் என்றாலும் சில பெண்களும் இப்பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டுத்தான் வருகின் றனர்.
இந்தவழுக்கை பெரும்பாலும் பரம்பரை ரீதியாக வருவது தான். வழுக்கைவந்துவிட்டால், அதன் மேல்முடி முளைக்க ச்சாத்தியம் இல்லை. கூடுமான வரையில், வராமல் தவிர் க்க முயற்சிசெய்யலாம். இப்பிரச்சனையால் வாழ்க் கையே இழந்தவர்கள் பலர். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே இதனால் பாதிக்க ப்பட்டார்கள். ஆனால், தற்போது பெண்களுக்கும் இது ஏற் படுகிறது. ஆண் பெண் இருவருக்கும் முடிப் பராமரிப்பில் அக்கறையின் மை, ஸ்ட்ரெஸ் என வழுக்கைக்கு நிறைய காரணங்கள் உண்டு.
மிளகு அளவில் தலையில் புழுவெட்டு வர ஆரம்பித்து, திடீர் என்று மண்டை முழுக்கப்பரவி, வழுக்கையை ஏற்ப டுத்தும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துவிடவேண்டும்.
* தலைமுடியில் வேர்க்கால்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு உயிர் இரு க்கிறதா? மறுபடியும் வளரச் செய்ய முடியுமா? என்று ஸ்கேன் மூலம் தெரிந்து அதற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் வழுக்கை விழாமல் தடுக்கலாம்.
* தினசரி அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக் குளியல் அவசியம்.
*தலைமுடியை இழுத்து, இறுக்கமாகப் பின்னுவதோ, கட்டுவதோ கூடாது. தளர்வான பின்னலும், ஹேர் ஸ்டைலும்தான் நல்லது.
*எலுமிச்சை விதைகள்50, மிளகு50, கைப்பிடி சின்னவெங்காயம் மூன் றையும் கரகரப்பாக அரைத்து, வழுக்கை விழுந்த இடத்தி ல் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால், உயிர்ப் புள்ள வேர்க்கால்கள் திறந்து, மறுபடி வளரத்தொடங்கும்.
*கிராமங்களில் கிடைக்கும் குமுட்டிக்காயை வாங்கி, அதை வெட்டினால் உள்ளுக்குள் ஈரப்பதம் இருக்கும். வழுக்கை விழும் பகுதியின்மேல் அதைத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து ஊறியதும் கழுவினால், உதிர்ந்த இடத்தில் முடி வளரும்.
=> பாரி*தமிழ்