கதற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்லன் நடிகர்! – பரபரப்பு
கதற கதற நடிகையின் தலைமயிரை பிடித்து இழுத்துச் சென்ற வில்லன் நடிகர்! – பரபரப்பு
நடிகை கதற கதற அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்ற வில்லன் நடிகரால் படப்பிடிப்பு தளத்தில்
பரபரப்பு ஏற்பட்டது. தான் கீர்த்தி சுரேஷின் தலைமுடியை பிடித்து தர தரவென இழுத்து ச் சென்ற போது, நடிகை கீர்த்தி சுரேஷ் கதறி அழுதார் ‘தொடரி’ படத்தில்வரும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது என்று வில்லன் நடிகர் ஹரிஷ் உத்தமன் தெரிவித்துள்ளார். பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் தொடரி.
ரிலீஸாகி உள்ளது. பாண்டிய நாடு புகழ் ஹரிஷ் உத்தமன் தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் அவர் படம் பற்றி கூறுகை யில், ரயில் துவக்கம் முதல் இறுதிவரை ரயிலில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் படம், தொடரி. நான் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வரும் கமாண் டோவாக நடித்துள்ளேன். ரயிலில் வரும்போது நடக்கும் சம் பவங்கள்தான் படம். தனுஷ் மிகவும் ஒத்துழைப்பு அளித்தா ர்.
நானும், தனுஷும் ஓடும் ரயிலின் மேல் சண்டை போடும் காட்சி உள்ளது. அந்த காட்சியில் கயிறு இல்லாமல் நடித்தோம். தனுஷ் பெரிய ஸ்டாராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர். ஒடிஷா மாநிலத்தில் உள்ள ரயகடாவில் படப்பிடிப்பு நட த்தப்பட்டது. காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதாகவும், அவர்க ளுக்கு தேவைப்படும்போது வந்து ஆட்களை கடத்திச்செல்வார்கள் என்
று ம் கிராமத்தினர் தெரிவித்தனர். அதைகேட்டு பயமாகவும், த்ரில்லாகவு ம் இருந்தது.
கீர்த்தி சுரேஷ் அருமையான நடிகை. ஒரு காட்சியில் நான் அவரின் முடியை பிடித்து தர தரவென இழுத்து செல்லவேண்டும். இக்காட்சியை இயக்குனர் என்னிடம் விளக்கியதும், நான் கீர்த்தி யிடம் சென்று காட்சியை கூறி உங்களுக்கு வலிக்கும் என்றேன். அவரோ பரவாயில்லை நடிக்கலாம் என் றார். நான் தலைமுடியை பிடித்து இழுக்கும்போது வலியால் கதறினார். வேண்டாம் என்றேன். பரவாயி ல்லை காட்சி நல்லா வந்தால் சரி, எனக்கு வலிக்கிற தே என லேசாக இழுக்காதீங்க, என்னைப்பற்றி கவலைப்படாம நல்லா பிடித்து இழுங்க என்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
கதறகதற ஒரு பெண்ணை அவளது தலை முடி யை பிடித்து இழுத்துச் செல்லும் இந்த காட்சி யை உண்மை என்று நினைத்த அந்த கிராம மக்கள் ஒன்று கூடிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு இது படப்பிடி ப்பு என தெரியவந்ததும் பலர் கலைந்து சென்றாலும், சிலர் மட்டும் நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்
.