மங்கையர் மலர்ப்பாத ஜோதிட நற்பலன்கள்! -வியத்தகு தகவல்
மங்கையர் மலர்ப்பாத ஜோதிட நற்பலன்கள்! -வியத்தகு தகவல்
ஜோதிடபலன்கள், கைரேகைகளை பார்த்துச் சொல்லுதல், பிறந்த நேரத்தை
வைத்து கணித்துசொல்லுதல், சாமுத்திரிகா லட்சண த்தை அறிந்து சொல்லுதல், எண் கணிதப்படி ஆராய் ந்து சொல்லுதல், நாடி ஜோதிடமும் அறிந்து சொல்லு தல் உட்பட பல வகைகளில் ஜோதிடப் பலன் கண்டறி யப்படுகின்றன• மேலும் ஒரு சிறப்பாக மங்களையரி ன் பாதங்களை வைத்து ஜோதிடப்பலன் அறியும் முறையை இங்கு காண் போம்.
· மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப்போல சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்த கைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவ ர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தி யவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வ திலும் தானதர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.
·பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம்மிக்கனவாகவும், மென்மையான வையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப்படி யக்கூடியனவாகவும் எப்போதும் வெதுவெது ப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண் கள் பெரும்பேறுகளைப் பெற்றுத் திகழ்வார்கள்.
·பாதங்கள் வெண்மையாகவோ, தங்கத்தைப் போன்ற நிறமுடையவனவாகவோ அமைந்திருக்கும் மங்கைய ர்கள் மகாபாக்கியசாலிகளாகவும் கணவனுக்கு ஏற்ற நல்லதொரு மனைவியாகவும் அன்னதானம் செய்பவர் களாகவும் பெரியோர்களைப்பக்தியுடனும், மரியாதை யுடனும் ஆதரிக்கும் நற்குணமுடையவர்களாகவும் விளங்குவார்கள்.
புண்ணியநதிகளில் நீராடிப்புண்ணிய திருத்தலங்களுக்கு ம், திருக்கோயில்களுக்கும்சென்று தெய்வதரிசனம் செய்வ தில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள். சாந்த சுபா வமும், தெய்வபக்தியும் மிக்க இவர்கள், கணவரின் பணி விடைகளை அன்புடனும் பொறுப்புடனும் செய்யும் நற்கு ண நற்பண் புகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
·பாதங்கள் முரடாகவும் கெட்டியாகவும் நிறம் மாறியும் காணப்படுவதுபோக விச்சைகுறைவைக்குறிப்பதாகும் . வெண்மைநிறத்துடனும், கோணலாகவும், வறண்டும் காணப்படுவது வறுமையைக் குறிக்கும். வெண்மை நிறமாகவும் சமமில்லாமலும் கல்லைப் போன்று கடின மாகவும் இருந்தால் துன்பங்கள் அதிகமாகும். கருமை நிறமாக இருப்பின் நல்ல அமைப்புகளைக் கெடுத்து விடும்.
·பாதங்களைப்பச்சை இலையின் பழுப்பு நிறமுடையனவாக ப் பெற்றவர்கள் கொடூரமனமுடையவர்களாகவும், நல்லோ ரைப் பழிப்பவர்களாகவும் தெய்வ நம்பிக்கையற்றவர்களா கவும, நாத்திகம் பேசுபவர்களாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்தம் அற்றவர்களா கவும் இருப்பார்கள்.
· மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகலவிதமான சுகங்க ளையும் அனுபவிப்பார்கள். அவர்களின் பிறவியோக த்தால் அவர்களுடைய வயது நிரம்பிய தாய், தந்தை யர் கணவர் புத்திரர்கள் ஆகியவர்கள் அடைவார்கள். இவர்கள் எப்போதுமே நற்காரியங்களைச் செய்வதி லேயே கவனம் செலுத்துவார்கள்.
· பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும்படி இருப்பவ ர்கள். வறுமையில் உழல்வதோடு மிக அதிகமான காம வேட்கையுடையவர்களாகவும், நடத்தை தவற க் கூடியவர்க ளாகவும், அற்பத்தனமான மனப்போக் கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடிய வர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்க ளாகவும், தன்னம்பிக்கையற்ற வெகுளிகளாகவும் இருப்பார்கள்.
· பாதங்கள் தடித்துப்பருத்திருப்பவர்களும் உள்ளங்கால் பூமியில் பதியும் படியாகத் தட்டையாக இருப்பவர்களு ம் மிகவும் தேய்ந்த உள்ளங்கால்களை உடையவர்களும் வீண் அபவாதங்களையும், பழிச் சொற்களையும் ஏற்க வேண்டியவர்களாவார்கள். வெறுப்படையும் இயல்பும், தயவுதாட்சண்யமற்ற மனப்போக்கும் கொண்டவர்களா க இருப்பார்கள்.
· பாதங்கள் பள்ளமாக இருப்பவர்கள் கணவனால் சில காலம் கைவிடப்பட வேண்டிய நிலையை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுகபோ கத்திற்கும், சுயதேவைப் பூர்த்திக்காக வும் நாடுபவர்களாக இருப்பார்கள்.
· உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெளிவாகவும் மேல் நோக்கிச் செல்வன வாகவும் அமையப் பெற்றவர்கள். அன்பு மிக்க நல்லதொரு கணவனை யடைவார்கள்.
.
.
=> கீதா சுப்ரமணியன்