பதற வைக்கும் சாபங்களும் அவற்றின் உறைய வைக்கும் வகைகளும்! – (சாத்திரம் சொன்ன பகீர் தகவல்)
பதற வைக்கும் உறைய வைக்கும் சாபங்களும் அவற்றின் பதற வைக்கும் உறைய வைக்கும் வகைகளும்! – (சாத்திரம் சொன்ன பகீர் தகவல்)
பதற வைக்கும் சாபங்களையும் அவற்றின் பதற வைக்கும் வகைகளையும் பார்ப்பதற்கு முன்
சாபங்கள் பலிக்குமா? இந்த கேள்விக்கு பதில் பலருக்கும் புரியாதபுதிராக வே உள்ளது. எல்லோரும் நினைத்த நேரத்தில் கண்ட கண்ட காரணங்களுக்காக நியாயமே இல்லாமல் கொடுக்கும் சாபங்கள் எல்லாம் பலிக்காது, நியாய மான காரணங்களுக்காக மனம் நொந்து சபித்தால் மட்டுமே சாபங்கள் பலிக்கும். இப்படி மனிதனுக்கு வாழ்வில்வரும் சாபங்கள் மற்ற மனிதர்கள் கொடுக்கும் சாபம் மட்டுமல்ல, இவையன்றி பல
வகைகளிலும் சாபங்கள் உண்டாகின்றன, அப்படிப்ப ட்ட சாபங்கள் பலவகைப்படும். அவை பெண் சாபம், பிரேத சாபம், பித்ரு சாபம், சர்ப்ப சாபம், கோசாபம், பூசாபம் (பூமி சாபம்), கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், முனி சாபம், பிரம்ம சாபம் மற்றும் குல தெய்வ சாபம்.
1.பெண் சாபம் :
பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை, தாயை ஆதரிக்காமல் கை விடுவது, மனைவியை கை விடுவது ஏமாற்றுவது மனம் நோகும்படி செய்வது இந்த காரணங்களால் பெண் சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வம்சம் நாசமாகும்.
2.பிரேத சாபம் :
இறந்தமனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாக பேசுவது , பிணத்தை தாண்டுவது, இறுதி காரியங்களை செய்ய விடாமல் தடுப்பது, இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்கவிடாமல் தடுப்பது, சாவு நடந்த வீட்டில் இருந்து 98 அடி வரை தீட்டு உண்டு அந்த எல்லைக்குள் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் உடலை அடக்கம் செய்யும் முன் உணவு உண்பது, தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது போன்ற காரணங் களால் பிரேத சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வியாதிகள், அவமானங்கள், கடன்கள், அற்ப ஆயுள், ஆயுள் குறைவு உண்டாகிறது.
3.பிரம்ம சாபம் :
வித்தை கற்று தந்த குருவை மறப்பது, நிந்திப்பது, தவ றாக பேசுவது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, கற்றவித்தையை பிறருக்கு சொல்லிக் கொடுக்காமல் மறைப்பது போன்ற காரணங்களால் பிரம்ம சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வித்யா நட்டம் என்னும் கல்வியில் குறைபாடு உண்டாகிறது.
4. சர்ப்ப சாபம் :
பாம்புகளை தேவையின்றி கொல்வது, அவற்றின் இருப் பிடங்களை தேவையின்றி அழிப்பது போன்ற காரணங்க ளால் சர்ப்ப சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக திருமண தடை, செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலியன உண்டாகிறது.
5. பித்ரு சாபம் :
தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்யாமல் இறுதிகாலத்தில் அவர்களை தவிக்கவிடுவது, உதாசீனப் படுத்துவது, ஒதுக்கி வைப்பது, அவர்கள் இறந்த பின்பு செய்ய வேண்டிய திதி பரிகாரங்களை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் பித்ரு சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக ஆண்வாரிசுகள் இல்லாமல் போகும், பலரிஷ்ட்ட தோஷத்தால் குழந்தைகள் இறக்கும்.
6. கோ சாபம் :
பசுவை வதைப்பது, பால் வற்றிய பசுவை இறைச்சிக்காக வெட்ட கொடுப்பது, கன்றையும் – பசுவையும் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க மறுப் பது, பசுவுக்குபோதிய உணவளிக்காதது போன்ற காரண ங்களால் கோ சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வா ழ்வில் வளர்சிகள் இல்லா மல் தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும்.
7. பூ (பூமி) சாபம் :
ஆத்திரத்தால் பூமியை சதா காலால் உதைப்பது, பூமியை பாழ்படுத்துவது, பூமியை சீர் கேடாக்கும் பொருட்களை பூமியில் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டா க்குவது, பிறரின் பூமியை அபகரிப்பது போன்ற காரணங் களால் பூ ( பூமி ) சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் நரக வேதனை அடைய நேரிடும்.
8. கங்கா சாபம் :
பலர் அருந்தக்கூடிய நீரை பாழாக்குவது, நீரை தேவைக் கு அதிகம் வீணாக்குவது, ஓடும் நதியை அசுத்தம் செய் வது போன்ற காரணங்களால் கங்கா சாபம் உண்டாகிற து. இதன் விளைவாக உடலில் நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகி வாட்டும், நம் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்.
9. விருட்ச சாபம் :
பசும் மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போக செய்வது, மரங்களை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடங்களை கட்டிடங்கள் கட்ட அழிப்பது, வனங் களை அழிப்பது போன்ற காரணங்களால் விருட்ச சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் தீரா கடன் கள், நோய்கள், வாகன விபத்துக்கள் உண்டாகி வாட்டும்.
10. தேவ சாபம் :
முன்னோர்கள் பூஜித்து வந்த தெய்வங்களின் பூஜையை செய்யாமல் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்ந்து பேசு வது, தெய்வகாரியங்களுக்கு உதவாமல் ஏளனம்செய்வ து போன்ற காரணங்களால் தேவ சாபம் உண்டாகிறது.
11. ரிஷி சாபம் :
உண்மையான ஆசார்ய புருஷர்களை, பக்தர்களை, ஆன்மீக வாதிக ளை மதிக்காமல் அவமதிப்பது போன்ற காரணங்களால் ரிஷி சாபம் உண்டா கிறது.
12. முனி சாபம் :
காவல் மற்றும் எல்லை தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைக ளையும், பூஜைகளையும் செய் யாமல் உதாசீனப்படுத்துவது ஆகிய காரணங்களால் முனி சாபம் உண்டாகிறது.
13. குல தெய்வ சாபம் :
குல தெய்வங்களுக்கு உண்டான பூஜைகளையும் மரியா தைகளையும் செய்யாமல் அவமதிப்பதால் குல தெய்வ சாபம் உண்டாகும்.
மேலே குறிப்பிட்ட தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குல தெய்வ சாபம் முதலியவற்றால் நமது வாழ்வில் உறவினர் பிரிவு, வம்ச அழிவு, செய்வினை, ஏவல், பில்லி, சூன்ய பாதிப்புகள் ஏற்பட்டு நமது குடும்பம் சீர்கெட்டு போகும்.
இவ்வாறு நமக்கு வாழ்வில் பல வழிகளில் சாபங்கள் தோன்றி நம் வாழ்வினை பாதிக்கும் நிலைகள் உண்டு. இத்தகைய பாதிப்புகளால் அவதிப்பட்டு வருபவர்கள், என்ன கார ணத்தினால் நம் வாழ்வில் துன்பங்கள் வருகிறது என்றே தெரியாமல் வாழ்வில் கஷ்டமும் வேதனையும் அடைந்து வருபவர்கள் நமது சர்வ சக்தி விருட்ச பீடத் தினை அணுகி ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமி களை சந்தித்து உரிய பரிகார முறைகளை தெரிந்துகொண்டு அதனை முறை ப்படி செய்து வாழ்வில் வழம் பெற்று வாழ வாழ்த்துகிறோம். நேரில் வர இயலாதவர்கள் தொலைப்பேசி, இ மெயில் வாயிலாகவும் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம்.
=> ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகள்
இதன் கீழே உள்ளபுகைப்படத்தை கிளிக் செய்யவும்
swamy g address and mobile number anupunga sir