Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?" -ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல்

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?- ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல்

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு? – ஊரறியா ஓர் அதிர்ச்சித் தகவல்

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன்… ஒரு பாண்டவ புத்திரன் என்ற

இரகசியம்.. அவன் இறந்தபிறகே உலகமறிந்தது. கொடைக்குப் பெயர்பெற்ற கர்ணனோ இறப்பதற் கு சிலநாட்கள் முன்தான் அறிந்திருந்தான். அதுவு ம் கிருஷ்ண பகவானின் லீலையால் !

மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப் பட்ட வாழ்வு? இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.

பூர்வ ஜன்மத்தில் கர்ணன்… சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான். தேவர்களை நிர்தாட்சண்ய மின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. எவரும் அந் த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன்பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.

இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?

எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டி னர். விண்ணவர்மீது இரக்கம்கொண்ட மகா விஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறு தல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித் தார். ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பத ற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர்.

நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத்தள்ளினார். இப்படி பலவருடங்கள் விடாமுயற்சி செய்து 999 கவசங்களை அறு த்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.

இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப் பெடுத்தான். இக்கவசமும் அறுக்கப்படவேண்டியதே! இக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு, நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாக வும் ஜனித்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல் லோரும் அறிந்ததே. கவசம் நீங்கியதால் தான் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.

நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளு க்கு காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவ ற்றுக்கு காரணம் பூர்வஜன்மக்கர்மாக்கள் ஆகு ம். கர்ணனின் வாழ்க்கை அமைந்தவிதம் இந்த உண்மையை நிரூபிக் கிறது.

=> வசந்த் ஆர், (முகநூல் பதிவு)

இந்த வரியின் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யவும்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: