Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

2017 ஜனவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்க‍ப்பட்ட‍ சென்னை நகரம் போல் பரிதாபமாய்

காட்சியளிக்கிறது. கடந்த ஒரு மாதமாய் நாம் கண்டவை எல்லாம்…. இவர்களெல்லாம் தலைவர்களா…. இவைகளெல் லாம்தான் கொள்கைகளா.. இவ்வ‍ளவுதானா நம் தேசம் என்று நினைத்து வெட்கித் தலைகுனிய வைக்கின் றன•

ரூபாய் நோட்டுப் பிரச்சனையில் நம் நாட்டின் ஆட்சி மன்றங்கள் முடங்கி ப்போனதை  நினைத்து வருத்த‍ப்படுவதற்குள் .. புதுதில்லியிலும் புதுச் சேரியிலும் முதல்வருக்கும் ஆளுநருகும் மாமியார் மருமகள் சண்டை ஓயாத அரசியல் தலைவலி என் றால். நம்மம்தா அம்மா… என்னை கைது செய்ய‍ முடியுமா? என்று பிரதமருக்கு சவால் விடுகிறார்.

சட்ட‍மன்ற உறுப்பினர் கட்சி தாவினால் தப்பு… ஆனால் முதல் மந்திரி அப்ப‍டியே தன் மந்திரி சகாக் களோடு கட்சி மாறினால்… அருணாசலப் பிரதேசத்தின் முதல்வர் தாவுவதற்கு இனி புதிதாய் கட்சிகள் பிறக்க‍ வேண்டும். மாதம் ஒரு கட்சி, ஆட்சி செய்ய‍ எப்ப‍டி நம் குடியரசு தலைவர் அனுமதிக்கிறார் என்பது பிரணவ (பிரணாப்) ரகசியம். கொஞ்சம் கீழே இறங்கி உத்திர பிர தேசம்தான் கோமாளித்தனதின் உச்ச‍க்கட்ட‍ம். அப்பா மகனை நீக்கினார். பின்பு சேர்த்துக்கொண்டார். தற் போது மகன் அப்பாவை நீக்கிவிட்டார். பாசவலைக்குள் சிக்குண்டு உ .பி. அரசியல் சிரிப்பாய் சிரிக்கிறது.

நம்தமிழ்நாட்டுக்கு வருவோமா? என்னதான் ஆச்சு நம்ம‍ ஊருக்கு என்ற விளம்பரம்போல என்னதான் ஆச்சு அம்மாவுக்கு? சென்றார் சரி! இருந்தார் அதுவும் சரி, இறந்தார் அது எப்ப‍டி? என்பதுதான் எல்லோரும் கேட்கிற கேள்வி.

வ‌ரலாறு படைத்த‍ ஜெயலலிதாவின் இறப்பு தமிழக மக்க‍ளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால்… அதற்கடுத்து அரங்கேறிய காட்சிகள் தான் தமிழகத்தை அதிர வைத்திருக்கிறது.

கல்லறையின் ஈரம் காய்வதற்குள் சட்டைப் பை க்குள் இருந்த படங்கள் மாறியதையும், அம்மா அம்மா என்றழைத்த‍ குரல்கள் தடாலடியாய் மாறி ஒலித்த‍தையும் பாசம்.. சுவாசம்.. விசுவாசம்.. எல்லாம் விநாடிப் பொழுதில் விலகி போனதையும் தான் கட்சித் தொண்டர்களால் உடனடியாய் ஏற்கமுடியவில் லை என்கிறார்கள்சிலர். எப்ப‍டியோ தெளிவு பிற க்கவேண்டும் தமழக அரசியலின் பெருமைத லை நிமிர வேண்டும் என்பதே எல்லோரின் புத் தாண்டு பிரார்த்த‍னை

இந்தியா வெங்கும் இன்றைய அரசியலின் நிலைமை வர்த்த‍கமாக வணி கமாக மாறியிருப்ப‍து கவலைக்குரியது, வேதனை க்குரியது

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடுள்ள‌ தலைவர்க ளை தட்டுப்பாடின்றி தேசமெங்கும் தேடிக் கண்டெ டுக்க‍ உரத்த‍ சிந்தனையுடன் புத்துணர்வுடன் புறப்படுவோம்.

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

கீழே உள்ள படத்தை கிளிக் செய்யுங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: