நாளை மாலை 5.45 மணிக்கு அனைவரும் வாங்க!
நாளை மாலை 5.45 மணிக்கு அனைவரும் வாங்க!
வருக வருக அனைவரும் வருக!
உரத்த சிந்தனையின் 33ஆம் ஆண்டு விழாவிற்கு . . .
சிகரங்கள் நமக்கு தூரமில்லை
சிறகுகள் அதுவரை ஓய்வதில்லை
உங்களது பேரன்புடனும் பேராதரவுடனும் உரத்த சிந்தனை (வாசக
எழுத்தாளர்கள் சங்கம்), தனது 33ஆவது ஆண்டு விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கிறது.
நாள்: 12/03/ 2016 ஞாயிறு மாலை 5.50 மணிக்கு…
இடம்: சந்திரசேகர் திருமண மண்டபம், எல்லையம்மன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033
நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்கள்
திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்களின்
தலைமையேற்று சிறப்புரை
எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள்
உரத்தசிந்தனை 33ஆம் ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரை
திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள்
பாரதி உலா நூலை வெளியிட்டு சிறப்புரை
தேசிய மணி திரு. இல• கணேசன் (மாநிலங்களவை உறுப்பினர்) அவர்கள் பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்புரை
மற்றும்
நல நிதி உதவி வழங்குதல்
பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற இருக்கின்றன• மேலும் நிகழ்ச்சியில் உரத்த சிந்தனையின் சென்னை வாசகர்கள் & தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உரத்த சிந்தனை வாசகர்கள் வருகை புரிய இருக்கின்றனர்.
உங்களது மேலான வருகையை, ஆவலோடும் எதிர்பார்த்திருக்கும் அன்புள்ளங்கள் உரத்த சிந்தனை மற்றும் விதை2விருட்சம்
உரத்த சிந்தனை ஆண்டு விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத் துள்ளோம். வாசகர்கள் அனைவரும், நாங்களே நேரில் வந்து அழைத்த தாக கருதி, விழாவிற்கு தாங்களும் தங்களின் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.
தொடர்புக்கு