நாள்தோறும் உலர் திராட்சைகளை சாப்பிட்டுவரும் மங்கையர்களுக்கு . . .
நாள்தோறும் உலர் திராட்சைகளை (Raisins – Kismis) சாப்பிட்டுவரும் மங்கையர்களுக்கு . . .
திராட்சைகளை பக்குவப்படுத்தினால் அதன் பெயர் உலர் திராட்சை, இந்த உலர் திராட்சையில்
கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாத விலக்குக் காலங்களில் பெண்க ளுக்கு, மலச்சிக்கல் தீர, என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
*
இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. கர்ப்பி ணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம்.
அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சை யை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கிய மாக பிறக்கும். மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும்.
இப்பிரச்சனைதீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.
உலர்திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்ன ரே சாப்பிட வேண்டும்.
=> ஹேமா
பெண்களின் பிரச்சினைகளுக்கு கை கொடுக்கும் உலர் திராட்சை