மீடியா வெளிச்சம் படாத ஒரு கலகல நடிகரைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் – மிஸ் பண்ணாதீங்க
அன்றைய கலைவாணர் முதல் இன்று இருக்கும் பரோட்டா சூரி வரை, ரசிகர்கள் அனைவரும் கலகல என்று சிரித்தும் சிந்தித்தும் மகிழ்ந்திட செய்தார்கள். அந்த
மேற்சொன்ன வரிகளுக்கு பொருத்தமானவர் கலக்கல் நகைச்சுவை நடிகர் கவு ண்டமணிதாங்க• நடிகர் கவுண்டமணியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் கன்ன ம்மபாளையம் அருகே உள்ள பல்லகொண்டாபுரம். இவரின் சொந்த
பெயர் சுப்பிரமணி. இவருக்கு சிறுவயதில் இருந்த நாடகத்தில் நடி க்க வேண்டும் என்று ஆசை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் நாடக கொட்டகையிலேயே கால த்தை கழித்தார்.

ஒரு முறை அவரது ஊரில் நாடகம் போட்டார்கள். அதில் இவர் கவுண்டர் வேடம் ஏற்று நடித்தார். இவரின் நடிப்பை பார்த்தவர்கள் அசந்துபோய் சுப்பிரமணியை அன்று முதல் கவுண்டமணி என்றே அழைத்தார். இவருக்கு 15
வய தாக இருக்கும் போது சகோதரி மைலாம்பாள் சென்னை அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனி யில் சேர்த்து விட்டார்.
ஆரம்பத்தில் சர்வர்சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கிளி போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். பின்னர் 16 வயதினிலே படத்தில் காமெடியனாக அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் காமெடியில் பெரிய அளவில் வலம் வந்தார். சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவர் செந்திலுடன் சேர்ந்து 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ள்ளார்.

சினிமாவில் வசனத்தில் அனைவரையும் வெளுத்து வாங்கும் கவுண்ட மணி சிறுவயதில் யாரிடமும் அதிகம் பேசமாட்டாராம். இவரது மனை வி சாந்தி. இவரை கவுண்டமணி காதலித்து திருமணம் செய்து கொ ண்டார். செல்வி சுமித்ரா என்ற 2 மகள்கள் உள்ளனர். கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…
‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள
வல்லக்கொண்டபுரம்! கவுண்ட மணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை . ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணி வண்ணன்!. பாரதிராஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!

அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு
மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போ து தான் அவரு க்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!
கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவுண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வை த்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டு மே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொட ர்ந்து வருகிறார்!

மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை! இவர் மட்டுமே 750 படங்க ளுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோ வாக மட்டும் நடித்த படங்கள் 12.
கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும்
ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்! உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மா திரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!

திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினை த்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிசன
த்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்! சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்! கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளி ராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமா கப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!. கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு
க்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவு க்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடை யாதுடா!’ என்பார். ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போது நண்பர்களைச் சந்திப்பது
ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சியின்போ துதான்!

கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!
கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’
‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோ ம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்து கொள்வார்!

‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனா ல், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார். அப்போது மருத்துவமனை க்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசி னால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!
– சுவாதி, வலைத்தமிழ்
