ஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால் – (இதை படிக்காமல் விமர்சிக்காதீங்க)
ஒரு மனிதனுக்கு உண்பதற்கு போதுமான உணவு (Food), மானத்தை மறைப்பதற்கு உடை (Dress), மழையிலும்
வெயிலிலிலும் இருந்து தன்னை காத்துக் கொள்ளவும், தன் பொரு ட்களை பாதுகாத்துக் கொள்ளவதற்காக தங்கும் இடம்தான். உறை விடம் (House). இந்த மூன்றில் மூன்றாவதாக சொல்லப்பட்ட உறை விடம்தான் ரொம்ப முக்கியம். இந்த உறைவிடத்திற்கான நில த்தை தேர்வுசெய்யும்போது மிகவும் கவனம் தேவை.
சதுரவடிவில் இருக்கும் மனை (Plot) முதல்தரமான நன்மைகளை அளிக்க வல்லது. அனைத்து திசையிலும் சமமான அளவு இருக்கு ம் மனைகள் (Plots) வாழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடம் என வாஸ்து (Vasthu)வில் கூறப்பட்டுள்ளது. சதுர மனைகளில் வீடு கட்டி குடியேறும்போது அக்குடும்பத்தினருக்கு சகல சௌபாக்கிய ங்களும் கிடைக்கும் . வியாபாரிகள், அரசு ஊழியர்களுக்கு இந்த மனை ஏற்றது.
சதுர மனைக்கு அடுத்தபடியாக செவ்வக மனை வருகிறது. இது சதுர மனை அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல பலன்களை வழங்கும். 40க்கு 60 அல்லது 60க்கு 40 என்ற நீள-அகலத்தில் உள்ளது செவ்வக மனைகளாகும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள், அமைச்சர்களுக்கு இது போன்ற அமைப்புடைய மனை ஏற்றத்தைத் தரும்.
பொதுவாகவே சதுரம் மற்றும் செவ்வக மனைகளே வாழ்வத ற்கு தகுதியானவை. இவை தவிர பாம்பு மனை (நீளம் அதிக மாகவும் அகலம் குறைவாகவும் இருப்பவை- 30க்கு 120) என்று குறிப்பிடும் அமைப்பில் மனைகள் உள்ளன.
பாம்பு மனைகளில் வீடு கட்டி குடியேறினால் அந்தக் குடும்பத்தினருக்கு அடுத்தடு த்து நோய்கள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே, பாம்பு மனை போன்ற அமைப்பை உடையவர்கள், வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிடம் எழுப்பும் பகுதியை முடிந்தவரை செவ்வகமாக அல்லது சதுரமாக மாற்றிக் கொ ள்வது நல்ல பலனைத் தரும். மீதமுள்ள இடத்தை காலியிடமாக
விட்டு விடலாம்.
ஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால், பாம்பு மனையில் தரைத்தளத்தை வாகனம் நிறுத்துவதற்கு உரிய இடமாக மாற்றி விட்டு, முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு பகு தியை அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பாம்பு மனையால் ஏ ற்படும் தாக்கத்தை (நோய், வழக்கு, திடீர் மரணம், விபத்து) குறைத்து விட முடியும்.
தகவல் – வனிதா மோகனராம்