திடீரென்று மனைவி பிரிந்து சென்றுவிட்டால் – ஓர் உளவியல் அலசல்
விவாகரத்து (Divorce) என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான
பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்? என்று கவலைப்படு வார்கள். அத்தகைய பெண்கள்மீது அனுதாபமும் கொள்வா ர்கள். ஆனால் எல்லா விவாகரத்துக்களிலும் ஒரு ஆணும் பாதிக்கப்படுகிறார். அந்த ஆணை நினைத்துப்பார்த்து யாரு ம் பரிதாபப்படுவதில்லை.
விவாகரத்தில் ஒருபெண் பாதிக்கப்படுவதுபோன்று ஒருஆணும் பாதிக்கப்படத்தான் செய்கிறார். பெண்ணின் அளவுக்கு ஆணுக்கும் அது சோ கத்தை தரவே செய்யும். கவலை, தனிமை, சமூக நிந்த னை, நிம்மதி இழப்புபோன்றவை ஆண்களுக்கும் உண்டு
குடும்பம் (Family) என்றதும் அன்பு (Love), கடமை (Duty), பாசம், அரவணைப்பு, அனுசரணை போன்ற அனைத்தும் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் பெண்களிடம் இ ருந்துதான் கிடைக்கும். பெண்கள் மட்டுமே அதற்கு பொ ருத்தமானவர்கள் எ ன்று கருதுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆண்-பெண் இருபாலருக்கும் பொருத்தமா னவை. ஆண்களிடம் இருந்தும் அன்பு, பாதுகாப்பு, அனுசரணை போ ன்றவை கிடைக்கும்.
விவாகரத்து மட்டுமல்லாது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவி த இழப்புகளாலும் கவலை ஏற்படும். பெண்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஆண்கள் கவலையை அதிகம் வெளிகாட்டி க்கொள்வதில்லை. பெண்கள் அழுவார்கள். புலம்புவார்கள். அவர்கள் சுபாவம் அப்படி. அழாத, புலம்பாத ஆண்களுக்கு வருத்தம் இல்லை என்று எடுத்துக்கொள்ள க் கூடாது.
ஆண்கள் உடலால் பலமானவர்கள். உள்ளத்தால் பலவீனமான வர்கள். பெண்கள் உடலால் பலவீன மானவர்கள். உள்ளத்தால் பலமானவர்கள். ஆண்கள் மனம் சோர்ந்து போகும்போது பெ ண்கள்தான் அவர்களுக்கு பலம் தருபவர்களாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான பெண்கள், தங்கள் கணவரிடம் ‘நான் இல்லாமல் நீங்கள் தனியாக அவஸ்தைப்பட வேண்டும். அதை நான் பார்த்து ரசிக்கவேண்டும். நான் விவாகரத்து செய்தால்தான் என் அருமை உங்களுக்கு புரியும்’ என்று சொல்கிறார்கள். மற்றவர்களைவிட தனக்கு அதிக மரியாதை தர வேண்டும் என்றும், அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாதபட்சத்தில் தான் இல்லாததால் தோன்றும் வெற்றிடத்தை உணர வைப்பதற்காக பிரிந்து செல்ல விரும்புகிறார்கள்.
பெண்கள் அதிகம் படித்து, நிறைய சம்பாதிப்பதால்தான் விவாகரத்து அதிகரித்து விட்டது என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் அதுமுழுமையான உண்மை அல்ல. ஏன்என்றால், சுயசம்பாத்தியம் அதிகம் இல்லாத முந்தைய காலத் திலும் பெண்களின் மனநிலை அப்படி த்தான் இருந்தது. கணவரிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால் கணவர் தன்னைத் தேடிவந்து அழைத்துச் செல்ல
வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சின்னச் சின்ன மோதல்கள் வந்தால் அதை காரணங்காட்டி முகத்தை உம்மெ ன்று வைத்துக்கொண்டு கணவரிடம் பேசாமல் ஒதுங்கியிருப்பா ர்கள். பின்பு கணவர் வந்து சமாதானம் செய்தால்தான் இறங்கி வருவார்கள்.
ஆண் தனக்கு பணிந்து போகவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் விவாகரத்து என்ற எல்லைவரைக்கும்கூட போய்விடுகிறார்கள். ‘தனக்கு விவா கரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் மிகுந்த மகிழ்ச்சி யாகவே இருக்கிறேன்’ என்று இன்முகம்காட்டவும் அவர்கள் தவறு வதில்லை. தனக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை எல்லாம் மறைத்துக்கொண்டு, முகத்தில் சிரிப்பைக் காட்டுவதில் பெண்கள் எப்போதுமே கைதேர்ந்தவர்கள்.
என்னதான் பெண்களுக்கு கல்வியறிவும், சுயசம்பாத்தியமும் இருந்தாலும் பெ ண்கள் தனித்து வாழ்வது போராட்டமான விஷயம். மற்ற படி மனநிலையைப் பொறுத்த வரை இருவருக்கும் ஒரே மாதிரியான வேதனை தான். சமூகத்தின் கேலிப் பார்வை , நண்பர்களின் கவலையான விசாரணை, மற்ற பெண்க ளின் சந்தேக பார்வை போன்றவைகளை எல்லாம் விவா கரத்தான ஆண்களும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்
ஆண்கள் வீரமானவர்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்றெல்லா ம் சொல்லப்படுவதால் ஆண்களால் அடுத்தவர்கள் முன்பு அழ முடிவதில்லை. அழாததால் அவர்களது மனபாரம் குறை யாது. மனஅழுத்தத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் . அதனால் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
ஆனால் பெண்கள் அழுது அரற்றி, தோழிகள் பலரிடம் கூறி மன பாரத்தை இறக்கி விடுவார்கள். விவாகரத்து ஆண்களை பொருளாதாரரீதியாகவும் நிலைகுலைய வைத்து விடுகிறது. விவாகரத்து பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு பெரிய தொ கையை தரவேண்டி இரு க்கும். இதற்காக அசையா சொத்து களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
கணவன்-மனைவி இருவர் பெயரில் இருக்கும் அசையா சொ த்துகளை அவசரமாக விற்க வேண்டியதிருக்கும். அப்போது மன அழுத்தத்துடன், பணஅழுத்தமும் சேர்ந்துகொண்டு அவ ர்களை வாட்டிவதைக்கும். எல்லாவற்றையும் சரிசெய்து விவாகரத்து என்ற முடி வை எட்டுவதற்குள் ஆண்களுடைய சம்பாத்தியத்தில் பாதி கரைந்து விடும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலிலும் நெருக்கடி உருவாகி விடும். அதனால் ஆண்களுக்கு விவாகரத்து என்பது பிரிவு மட்டுமல்ல பெரும் செலவும்கூட.
இந்திய ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட வேலை களுக்கு மனைவியை சார்ந்திருக்கிறார்கள். திடீரென்று மனைவி பிரி ந்து சென்றுவிட்டால் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள வெகு நா ட்களாகும். அதன்தாக்கம் அவர்களுடைய அலுவலக வாழ்க்கையை யும் பாதிக்கும். வேலையில் பின்தங்கி கெட்டபெயர் வாங்க வேண்டி யிருக்கும். வீட்டிற்குப் போகவும் பிடிக்காது. வேலையில் முன்புபோல ஈடுபாடும் இருக்காது.
=> தமிழ்