கூந்தலுக்கு வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ….
கூந்தலுக்கு வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ….
முதலில் என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப
சிகிச்சை (Treatment) எடுப்பதே சிறந்தது. அதிகநேரம் ஏ.சி அறையி ல் இருப்பது, மன அழுத்தம் (Stress), தவறான நேரத்தில் தூங்குவது (Sleepless) போன்ற காரணங்களால் சீக்கிரத்தில் முடி கொட்டி (Heir Falls) விடுகிறது.
செம்பருத்தி எண்ணெய், திரிபலா எண்ணெய் ஆகியவற்றால், வார ம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தலைக்கு மசாஜ் செய்வதுவந்தால், மன அழுத்தம் (Stress) குறையும். தினமும் தலை க்குப் பாதாம் எண்ணெய் தேய்த்து, 20 நிமிடங்கள் காயவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்.
பாதாம் எண்ணெய் (Badham Oil) நன்றாக முடி வளர உதவும். இரவு எண்ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கக் கூடாது. உடல்வாகைப் பொறுத்து, ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மாறுபடும். பல்வேறு கூந்தல் பிரச்சனை(Heir Issues)களால் அவதிப்படு பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை கூந்தல் (Heir) அலசும் பொடியை வீட்டிலேயே தயார் செய்து வாரம் 1 முறை அல்லது இருமுறை பயன்படு த்தி வந்தால் நிரந்தர தீர்வு காணலாம்.
சிகைக்காய் அரை கிலோ பச்சைப் பயறு, வெந்தயம் தலா 100 கிராம், செம்பருத்தி இலை, வேப்பிலை (Neem) தலா 20 ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை கஞ்சித் தண்ணீரில் கலந்து, கூந்தலை அலசலாம்.
1கப் தண்ணீரில் 1/2 எலுமிச்சைப்பழத்தின் சாறைக்கலந்து, கடைசியில் அலசவும். இதுவே, கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனர்.
பலன்கள்:
முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். முடி உதிர்வது நிற்கும். இயற்கையில் சுரக்கும் எண்ணெயை எந்தவிதத்தி லும் பாதிக்காது. முடி வளர்ச்சியைத் தூண்டும். கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
=> தமிழ்