மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்தமான 26 வாழ்வியல் தத்துவங்கள்
மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்தமான 26 வாழ்வியல் தத்துவங்கள்
ஆன்மீக மெய்ஞானி, கருணையின் மறுவடிவம், இரக்கத்தின் சிகரம், பண்பட்ட
மா மனிதர், ஆதி சங்கரர் ( #Adhisankarar ) எழுதிய பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா ( #Prasnottara_ratna_malika ) என்ற புகழ்பெற்ற படைப்பில் இடம்பெற்ற கேள்வி பதில்களிருந்து சில கீழே காணலாம்.
1. எது இதமானது ?
தர்மம்.
2. நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.
4. கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
5. எதிரி யார் ?
சோம்பல்.
6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு.
7. குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன்.
8. சூரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
10. எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள்…. ஆகியவை.
13. சந்திரனுடைய கிரணங்களைப்போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார்?
நல்லவர்கள்.
14. எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
15. எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
16. எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம்.
17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
காலமறிந்து செய்யும் உதவி.
18. இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம்.
19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்… ஆகியோர் !
20. சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
23. செவிடன் யார் ?
நல்லதைக் கேட்காதவன்.
24. ஊமை யார் ?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
25. நண்பன் யார் ?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
26. யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்
Great message