Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாம்பிராணி புகையை சுவாசிப்பதால் மிரண்டோடும் வியாதிகள்

சாம்பிராணி புகையை சுவாசிப்பதால் மிரண்டோடும் வியாதிகள்

சாம்பிராணி ( #Frankincense ) புகையை சுவாசிப்பதால் மிரண்டோடும் வியாதிகள்

பொதுவாக நம் வீட்டில் பூஜையின் போது சாம்பிராணி ( #Frankincense ) புகை போடும்

பழக்கம் உள்ளது, அதுபோல் குழந்தைகள் குளித்த பின்பு தாய்மார்கள் சாம்பிராணி ( #Frankincense ) புகை போடுவார்கள். தமிழ்நாட்டில் சாம்பிராணி ( #Frankincense )யின் உபயோகம் பலவாக உள்ளது.

இவ்வாறு செய்வதினால் என்ன பயன்கள்?

சாம்பிராணி ( #Frankincense ) மிகச்சிறந்த வாசனை பொருள்; இதன் புகை நம்முடைய மனத்தை சாந்தப்படுத்துகிறது. அதனால் தெய்வ வழிப்பாட்டில் மிகவும் உபயோகிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு சளி பிடிப்பதை தவிர்க்கிறது, அதனால்தான் குழந் தை குளித்த பின்பு சாம்பிராணி ( #Frankincense ) புகை காட்டப்படுகிற து. சித்த மருத்துவத்தில் வாத நோய்க்கு அருமருந்தாகும்.

சாம்பிராணி ( #Frankincense )யை நல்லெண்ணெயில் நன்றாக காய்ச்சி தேய்த்து வந்தால் வாத நோய் குணமாகும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் சளி ( #Cold )யால் ஏற்படும் தலைவலி ( ( #Headache ) யை குண மாக்க உதவுகிறது. ஏலக்காய், மஞ்சள், சாம்பிராணி ( #Frankincense), வாய்விளங்கம் மற்றும் நாயுருவி விதை, இந்த ஐந்து பொருட்களையும் நன்கு இடித்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளை துணியில் இட்டு பென்சில்போல் சுருட்டி க் கொள்ள வேண்டும்.

ஒருமுனையில் 1 அல்லது 2சொட்டு நல்லெண்ணெய் விட்டு கொளுத்த வேண்டும்; எரியும் பொழுது தீயை அணைத்துவிடவும். அப்பொழுது புகை அதிகம் வரும், அந்த புகையை சுவாசித்தால் சளியுடன் கூடிய மூக்கடைப்பு போய் தலை வலி ( #Headache ) நிற்கும்.

=> திருமுருகன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: