பட்டப்பகலில் பயங்கரம் – மாணவியின் கழுத்து அறுப்பு – மாணவனுக்கு சரமாரி அடி உதை – வீடியோ
பட்டப்பகலில் பயங்கரம் – மாணவியின் கழுத்து அறுப்பு – மாணவனுக்கு சரமாரி அடி உதை – வீடியோ
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்துவரும் விவசாய தோட்டக் கலை மாணவி,
லாவண்யா அதே பல்கலை கழக மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அதே பல்கலை கழகத்தில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன் அந்த மாணவியின் கழுத்து கத்தியால் அறுத்துள்ளார். அந்த மாணவனின் இந்த கொடூர மான செயலைக் கண்ட பொதுமக்கள் உடனே அந்த மாணவனை கற்களால் சரமாரி யாக தாக்கியுள்ளனர். போலிசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த அண்ணாமலை நகர் போலீசார் அந்த மாணவனைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அண்ணாமலை பல்கலை கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கழுத்து கொடூரமாக அறுக்கப்பட்டதால் நிலைகுலைந்த மாணவி லாவண்யா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மாணவி லாவண்யா மீது இக்கொடூரக் கொலைவெறித் தாக்குதல் என்ன காரணம்? காதல் விவகாரமா இருக்குமா என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மாணவியின் கழுத்தை முரட்டுத் தனமாக அறுத்த மாணவன்! சிதம்பரத்தில் நடந்த கொடூரம்! (குற்றம், கொலை, திருமணம், crime, murder, marriage, #Chidambaram, #Horticulture, #Student #attacked, #hacked, #murder