18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட தீர்ப்புக்கள்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் – செல்லும், செல்லாது – இருவேறுபட்ட தீர்ப்புக்கள்
டிடிவி தினகரன் ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு
எதிராக போர்க்கொடி உயர்த்தினர் இதனால், அந்த 18 எம்.எல்.ஏக்களையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அறிவித்தார்.
அந்த எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 1:30மணிக்கு விசாரணை க்கு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் கொண்ட பென்ச் விசாரித்தது. இந்த வழக்கி ல் 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது
செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ( #ChiefJustice #IndraBanarji அவர்களும், 18 அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட் டது செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தர் அவர்களும் தீர்ப்பு கள் வழங்கியுள்ளனர்.
இரு நீதிபதிகள், இருவேறுபட்ட தீர்ப்புக்கள் வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்லும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.