தயங்கிய நடிகை – அடம்பிடித்த இயக்குநர்
தயங்கிய நடிகை – அடம்பிடித்த இயக்குநர்
எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்கக் கதை என இரு படங்களில்,
நடிகை மேகா ஆகாஷ் நடித்து முடித்து விட்டாலும், இருபடங்களு மே இன்னமும் ரிலீசாக வில்லை. இந்நிலையில், மூன்றாவதாக அதர்வா ஜோடியாக பூமராங் என்ற படத்திலும் நடித்து முடித்துவி ட்டார். பூமராங் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், முதல்முறையாக பூமராங் படத்தில் மேகா ஆகாஷ் ( Megha Akash ) தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசி யிருக்கிறார்.
இதுபற்றி இயக்குனர் கண்ணன் ( #kannan)கூறும்போது, மேகா ஆகாஷை சொந்த குரலில் டப் செய்ய வலியுறுத்துவதற்கு முக்கிய காரணமே நடிகை மேகா ஆகாஷ் தான். பக்கத்துவீட்டு பெண் கதாபாத்திரத்தில் அவரு டைய சிறப்பான நடிப்பு அப்படி. மிகசிறப்பாக நடித்திருக்கிறார், படத் தை பார்த்து நாங்கள் வியந்தோம். அவருடைய திறமைகள், டப்பிங் செய்யும் வேறு சில கலைஞர்களால் மறைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில், மேகா ஆகாஷ் தயக்கத்தோடுதான் இருந்தார். ஆனால் அவர் டப்பிங் செய்தபோது, எங்களுக்கு நிறைவாக அமைந்தது” என்றார்.
இப்படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் இயக்குநர் கண்ணனே தயாரிக்கி றார். அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் மேயாத மான் இந்துஜா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் உபென் படேல் வில்லனாக நடித்திருக்கிறார். RJ பாலாஜி காமெடியில் கலக்க, காமெடி நடிகர் சதீஷும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தி ருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
சொந்தக் குரலில் டப்பிங் பேச தயங்கிய நடிகை மேகா ஆகாஷ்-ஐ எப்படி அடம் பிடித்து, சொந்த குரலில் பேச வைத்து விட்டார் இயக்குநர் கண்ணன். #Boomerang #MeghaAkash