பயத்தில் ஓடிப்போன நடிகை – இயக்குநர் ஷங்கர் டென்ஷன் – பரபரப்பு
பயத்தில் ஓடிப்போன நடிகை – இயக்குநர் ஷங்கர் டென்ஷன் – பரபரப்பு
படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை
தமிழ்த் திரையுலகில் கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிவரும்
திரைப்படம் ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ ( Avalukkenna Azhagiya Mugam ). ஏ.கேசவன் இயக்கிவரும் இப்படத்திற்கு வைரமுத்து ( Vaira muthu )பாடல்கள் எழுதியுள்ளார். இப்திரைப்படத்தின் பாடல் காட்சிக ளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாகிக்கொண்டு இருந்த னர். மிகஉயரமான இடத்தில் வைத்து பாடலை நடன இயக்குனர் ஷங்கர் படம் பிடித்துக் கொண்டு இருந்தவேளையில் உயரமான இட த்தில் நிற்கவைத்தால் பயத்திலிருந்த நடிகை அனுபமா பிரகாஷ் ( actress Anupama Prakash ), மாலை படப்பிடிப்பு தளத்தில் இருந்து தன் அறைவரை சென்றுவருவதாக சொல்லிவிட்டு சென்றவர் யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து
விமானம் மூலம் தனது சொந்த ஊர் டெல்லிக்கு ஜூட் விட்டார்.
இத்தகவல் தெரியாமல் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்த குழு வினர்கள். அவரை கொடைக்கானல் முழுவதும்தேடினர். பின் புதான் தெரிந்தது அவர் டெல்லி சென்றது, பின்னர் உடனே தயா ரிப்பாளர் டெல்லிக்குசென்று சமாதானம்செய்து மீண்டும் படப்பிடிப்பிற்கு அழைத்து வந்தார். இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7 தேதி வெளியாகிறது.