Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம்

ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம்

ரஜினி பகிரங்க எச்ச‍ரிக்கை – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை விலகச்சொல்லி ரஜினி காட்ட‍ம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர

மண்டபத்தில் சந்தித்தார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களை பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும்? நான் ஏதாவது பேசினால் உடனே விவாதமாகி விடுகிறது. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஊடக நிருபர் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு தலை சுற்றிவிட்டது. நைஸ் நைஸ் என்றேன். நான் தனிக்கட்சி ஆரம்பித்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். 

இதேபோல் நேற்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சென்னையில் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

ரஜினிகாந்த வெளியிட்ட அறிக்கை:


அரசியலில் பதவி சுகமா …! இப்போதே ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி விடுங்கள்…! மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை. பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ரஜினி மக்கள் மன்றத்தில் நியமனம், மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் என் ஒப்புதலுடனே அறிவிக்கப் படுகின்றது. அனுமதியின்றி நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

மன்றத்தை வைத்து அரசியலில் சாதிக்க முடியாது. வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது.மன்றத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது. மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது.

தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறோம். மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வதற்கு நாம் ஏன் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும்.அரசியலில் பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன் என்று பரபரப்பாக அறிக்கையில் உள்ளது. பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

( #Rajni #Rajini #Rajnikanth #Rajinikanth #Politics #MakkalMandram #Cinema #TamilNadu #RajiniMakkalMandram

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: