கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை
கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை
பெண்கள், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான
ஒன்றாக கருதப்படுவது மல்லாந்து ( #Supine ) பார்த்தபடி தூங்கக்கூடாது. பக்கவாட்டில் தான் தூங்கவேண்டும் என்பதுதான் அது. இதுபற்றி மருத்துவ அறிவியல் என்ன கூறுகிற து. இதோ சில உண்மைகள்..!
* முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் 4 ஆம் மாதத் தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.
* மல்லாந்து படுத்தால், கருப்பை ( #Uterus )யில் இருக்கும் நீரில் மிதந்துக் கொண்டி ருக்கும் தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
* 4மாதங்களுக்குபிறகு குழந்தையின் எடைகூடும் நிலையில் மல்லாந்து பார்த்தபடி படுத்தால் தாயின் குடல்மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.
* அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு ( #Hip ) மற்றும் முதுகு ( #Back ) எலும்பிலும் அழுத்தம் ஏற்படும். இதனால் தாயின் உடலில் ரத்த ஓட்டமும் ( #Blood #Circulation ) பாதிக்கும்.
* தாய், பக்கவாட்டில் ( #Lateral ) படுத்திருக்கும்போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும்போது அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும்போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும். நின்று கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும். (தண்ணீர் பலூனின் இயல்பை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்).
அதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேய்க்கும் மிகவும் நல்லது.
=> மலர்