சிவனுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் இதோ
சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் ஒன்று
நடைபெற்றதாக இணையத்தில் கட்டுரை ஒன்றை படித்தேன். அதனை நீங்களும் படித்து மகிழ இங்கு பகிர்ந்திருக்கிறேன். இதோ அந்த பதிவு
ஒரு தேங்காய் மட்டும் ஆணவத்தாேடு அருளே வடிவான சிவபெருமானை நெருங்கி பேசத் தாெடங்கியது.
தேங்காய் – ” நான் தேவர்களையே காய் (காேபி)ப்பவன் அதனால்தான் எனக்குத் தேங்காய் என்று பெயர் வந்தது தெரியுமா?”
(எனக்கேட்டு தானும் சிவபெருமானும் ஒன்றுதான் என வாய்ப்பந்தல் பாேட்டது. அதன் நாேக்கம் அறிந்த சிவபெருமானும்)
சிவபெருமான் – அப்படியா? நான் கெட்டியான ஆமை ஓடு அணிந்திருக்கிறேனே” என்றார்.
(தேங்காய் விடவில்லை)
தேங்காய் – நானும் கூடத்தான் மேலே கெட்டியான ஓடு வைத்திருக்கிறேன். தேங்காய் ஓடு என்பார்களே கேள்விப்பட்டதில்லையா?”
என்றது இறுமாப்பாேடு.
சிவபெருமான் – “யானை, புலி பாேன்றவற்றை உரித்திருக்கிறேனே”
என்று சாெல்ல,
தேங்காய் – “நான் கூடத்தான் மட்டையை உரித்துவிட்டு உட்கார்ந்திருக்கிறேன்”
என்றது இறுமாப்பாக.
சிவபெருமான் – மேலும் பாெறுமையாக, “சரி…சரி..நான் வெண்ணீறு பூசி, வெள்ளை வெளேரென்று விளங்குகிறேனே” என்றார்.
தேங்காய் – இன்னும் ஆணவத்தாேடு, ” எனக்கு அந்தக் கட்டாயமெல்லாம் இல்லை. இயற்கையாகவே நான் வெள்ளையாகத் தான் இருக்கிறேன்” என்றது.
சிவபெருமான் – “நான் கங்கையைத் தாங்குகிறேன்” என்றார்
தேங்காய் – “நான் இளநீரைத் தாங்குகிறேன்” என்றது
சிவபெருமான் – “எனக்கு மூன்று கண்கள்” என்றார்
தேங்காய் – “அட… எனக்கும் கூடத்தான் மூன்று கண்கள் உள்ளன” என்றது.
சிவபெருமான் – “நான் மறைகளின் முடியி்ல் இருக்கிறேன்” என்றார்
தேங்காய் – “நான் மரங்களின் முடியில் இருக்கிறேன்” என்றது
சிவபெருமான் – “எனக்கு சடைக்குடுமி இருக்கிறதே” என்றார்
தேங்காய் – “எனக்கும் தான் குடுமி இருக்கிறது” என்றது தேங்காய்.
(ஆணவத்தின் உச்சியிலே ஒலித்த தேங்காயின் பதிலைக் கேட்ட சிவபெருமான்)
சிவபெருமான் – “தேங்காயே… பணிவு என்பதே காெஞ்சமும் இல்லாத அகம்பாவம் பிடித்த நீ சிதறும் படியாக எல்லாரும் உன்னை உடைக்கட்டும்” என்றார்.
(அடக்கம் இல்லாமல் ஆணவமாகப் பேசினால் சிதறு (தேங்)காயாக நம் வாழ்க்கை சிதறிப்பாேகும் என்று உணர்த்துகிறது இந்தக்கதை…)
=> விஜி