கோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி
பிரேமம் திரைப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, இந்தியா முழுக்க பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி, மாரி-2 தமிழ் திரைப்படத்தில் நடித்தார். மேலும் அதில் இடம்பெற்ற ஏய் கோலி சோடாவே என்ற பாடலிலுக்கு நடனம் ஆடி தமிழக ரசிகர்களின் மனத்தில் எளிதாக இடம்பெற்றார். இதனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்?’ என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ‘அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் 3 சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவர்கள் சந்தாஷமாக இருக்க உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
‘தோல் நிறம் பற்றி சிலர் பேசுகிறார்கள். வெளிநாட்டினரிடம் சென்று நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள், அப்படியிருந்தால் அதனால் கேன்சர் வரும் என்று கூற முடியுமா? அது அவர்களுடைய நிறம் அவ்வளவுதான்’ என்றார். ஏற்கனவே நடிகை சாய் பல்லவி ரூ.1 கோடி சம்பளத்துடன் வந்த ஆடை விளம்பர வாய்ப்பிலும் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sai Pallavi, சாய் பல்லவி, மாரி, பிரேமம், விதை2விருட்சம், Maari, Mari, Premam, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,