
பிசிசிஐ செயலாளராக, அமித்ஷாவின் மகன் தேர்வு
பிசிசிஐ தலைவராக சௌரவ் கங்குலி, செயலாளராக, அமித்ஷாவின் மகன் தேர்வு
பிசிசிஐ தலைவராக, முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலியும் செயலாளராக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வினோத் ராய் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. முறைப்படி பிசிசிஐ தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் லோதா கமிஷன் பரிந்துரைப்படி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதில் கங்குலி மட்டுமே தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பிசிசிஐ செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷாவும், புதிய பொருளாளராக அருண் துமாலும் தே