Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆசையாய்

அன்புடன் அந்தரங்கம் (16/06/2013) – “அவள் உங்களுடன் பழகுவது, படுப் பது, இருப்பது எல்லாம் புனிதமான உறவின் அடிப்படையில்; அதைக் கொச்சைப்படுத்தாதீர்!”

அன்புள்ள அம்மா— நான் அரசு அலுவலகத்தில் நல்ல நிலையில் வேலை பார்த்துக் கொ ண்டு இருப்பவன். சரியான வேலை இல் லாததால் கல்யாணமே வேண்டாம் என இருந்த நான், தகுதிக்கேற்ற நல்ல நிலை யான வேலை கிடைத்த பின், என் உடன் பிறந்த தம்பியின் வற்புறுத்தலால் (தம்பி க்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் கழி த்து) திருமணம் செய்து கொண்டேன். என் தம்பி, விலாசம் இல்லாத குடும்பத் திற்கு விலாசம் கொடுத்தவர், நிர்க்கதி யாக அல்லாடிக்கொண்டு இருந்த குடும் பத்தை தலை தூக் கி நிறுத்திய பெருமை இவருக்கு உண்டு. என் திருமணத்திற்காக உடல் உழைப்புடன், செல வும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தவர் என் தம்பி. என் மனைவி மூன்று பட்டங்கள் வாங்கியவர். நான் நான்கு பட்டங்கள் வாங்கியவன். இதை (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/06/13): “நான், அதுபோல் ஓர் இளைஞரை தேடலாமா?”

அன்புள்ள அம்மா— நான் எம்.பி.ஏ., பட்டம் பெற்ற இளம்பெண். ஒரு வங்கியில் அதிகாரி யாகப் பணியாற்றுகிறேன். நல்ல சம்பளம்; எதிர்காலத்தில் மிகப் பெரிய பதவி கிடைக்கும் வாய்ப்புள்ள து. என் திருமணத்தை உடனே நடத்தி விட வேண்டுமென்று பெற்றோருக்கு ஆசை; பெரிய பதவி வகிக்கும் ஒரு மாப்பிள்ளையைத் தான் அவர்கள் தேடு கின்றனர். ஆனால், என் மனதில் கவலை. திருமண த்திற்கு பிறகு ஒரு பெண், தன் சுதந்திரத் தையும், பெர்சனாலிட்டியையு ம் இழந்து, கணவனுக்கு அடிமைப்படு வதைத்தான் பார்க்கிறேன். திருமணம் செய்து கொண்ட என் சக பெண் ஊழியர்க ளுக்கு அலுவலகத்திலும் வேலை; வீட்டிற்குத் திரும்பினால் அங்கே யும் வேலை. ஓய்வே இல்லை! இரண்டு "ரோல்'களிலும் - கடும் முயற்சி எடுத்தும் திறமையாகச் (more…)

அன்புடன் அந்தரங்கம் (02/06/13): “நீ என்னை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்”.

அன்புள்ள அம்மாவுக்கு— நான் 18 வயது மாணவி. பட்டப்படிப்பு முதல் வருடம் படிக்கிறேன். கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாக பழகு வேன். காதல் என்றாலே பிடிக்காது. அதுவும் திருமணத்திற்கு முன் வரும் காதல் நிலைக் காது; திருமணத்திற்கு பின் வரும் காதல் உண்மையானது; நிலைக்க கூடியது என்ற கருத்துடையவள். என்னிடம் சக மாணவன் ஒருவன் நன்றாக பேசி பழகுகிறான். என க்கு அவனை மிகவும் பிடிக்கும் நண்பனாக. அவன் என் வீட்டிற்கு வந் துள்ளான்; நானும் அவன் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளேன். எங்கள் இருவர் கருத்தும் ஒரே மாதிரி இருக்கும். ஆனால், சில நேரம் அவன் பேசுவதை கேட்கும்போது, ஒருவேளை அவன் என்னை காதலிக்கிறானோ என எண்ணத் தோன்றும். என்னி டம் ஒருமுறை, "நான் நான்கு பேரை மட்டும் என் வாழ்நாள் முழு (more…)

அன்புடன் அந்தரங்கம் (26/05/13): “இதெல்லாம் காதலிக்கிற பெண் யோசிக்க வேண்டிய விஷயங்கள்”

அன்பு அக்காவுக்கு — வணக்கம். எனக்கு திருமணமாகி, இரண்டு பெண்குழந்தைகள் உள் ளனர். மூத்த பெண் பொறியியலும், இரண்டாவது மகள் பத்தாவதும் படிக்கின்றனர். எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பையனை கல்யா ணம் செய்துக் கொள்ள விரும்புகிறாள் என் மூத்த மகள். மூன்று வருடமாக இருவரும் விரும்புகின்றனர். அந்தப் பையனோ +2தான் படித்திருக் கிறான். நல்ல வருமானம். நல்ல குணம் எல்லாம் இருக்கிறது. படிப்பு மட்டும்தான் சமமாக இல்லையே தவிர, மற்றபடி குறை ஏதும் இல்லை. எங்கள் குடும்பம் பெரியது. எல்லாருமே மெத்தப் படித்தவர்கள். இத னால், என் குடும்பத்தில் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கி ன்றனர். என் மகளோ ஒரே பிடிவாதமாக, (more…)

அன்புடன் அந்தரங்கம் (19/05/13): உன் வயதுக்கும், இளமைக்கும் நல்ல துணை இருந்தால் . . .

அன்புள்ள அக்காவிற்கு — நாங்க சலவை செஞ்சு பொழைக்கறவங்க. எனக்கு இரண்டு வரு ஷம் முந்தி கல்யாணம் செஞ்சு வச்சாங்க. என் வீட்டுக்காரரு பொள் ளாச்சி. அவருக்கு அந்த ஊருல நல்ல வேலை இல்லன்னுட்டு கோயமுத்தூரு கூட்டிட்டு வந்து, நிறைய வீட்ல துணி துவைக்க சேத் து விட்டோம். ஒரு இஸ்திரி கடையும் வெச்சு குடுத்தோம். இவ்ளோ செஞ்சும் கொஞ்ச கூட அவருக்கு திருப்தி இல்ல. பொள்ளாச்சிக்கே, போகலாம் ன்னு கூப்பிட்டார். ஏழு மாசம் முன் எனக்கு குழந்தை பிறந்தது. நாலு மாசம் முன் பொள் ளாச்சி போனவரு, வரவே இல்ல. அங்க போயிட்டு வந்த சொந்தக் காரர் ஒருவர், "அவரு அந்த ஊருலயே வேற பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டார்'ன்னு சொன்னார். அவருகிட்ட கேட்டதுக்கு எங்கூட வாழ மாட்டேன்னும், அவ கூடத் தான் வாழ்வேன்னும் சொல்லிட்டாரு. அவருமேல கேசுபோட சொன் னாங்க. ஆனா, எங்ககிட்ட பண வசதி இல்ல. எங்களால அலையவும் முடியாது. அதனால (more…)

அன்புடன் அந்தரங்கம் (06/04/13): மாமியாரை பிடிக் கவில்லை என்று புருஷனையே விட்டு விட்டு வருவாயா?

பாசமுள்ள அம்மாவுக்கு — எனக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நான் திருமணமாவதற்கு முன், பி.எஸ்.சி., பட்டப் படிப்பு முடித்திரு ந்தேன். என் கணவரின் முயற்சியால், பி.எட்., பட்டம் பெற்று, ஒரு ஆசிரியை பணிக்கு தகுதி பெற்றிருக்கி றேன். என் கணவர் எம்.எஸ்.சி., பி.எட்., படித்து, ஒரு தனியார் பள்ளியில் சொற்ப சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறார். அத்துடன் பைனான்சும் செய்து வந்தார். கெட்ட பழக்கம் ஏதும் இல்லை. என்னிடம் என் மாமியார் நடந்துகொள்ளும்விதம் எனக்கு பிடிக்க வில்லை. அதாவது, என்னை மதிப்பதில்லை. இதனால், என் கணவ ருக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வரும். என் கணவர், அம்மா பிரியர் அல்ல வெறியர். அதனால், நான் எது சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். இத்தருணத்தில், நாம் தனியாக (more…)

அன்புடன் அந்தரங்கம் (31/03/13) : “என்னை எப்படித்தான் மறந்தாளோ?”

அன்புள்ள அக்கா, என் வயது 52. நான் பள்ளி ஆசிரியர். கிறிஸ்தவன். என் வாழ்க்கை யில் நடைபெற்ற சம்பவம் இது. முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, அவள் என்னை காதலித் தாள்; நானும், அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன். இருவரும் கடிதங்கள் பரிமாறிக் கொண் டோம். அவள் வீட்டில் எங் கள் காதலுக்கு எதிர்ப்பு. என்னை மறந்து விடும்படி அவள் பெற்றோர் கூறினர். அவளை அடித்துத் துன்புறுத்தினர். அவளோ என்னை மறக்கவில்லை; மணந்தால் என்னையே மணப்பேன் என்ற உறுதி யுடன் இருந்தாள். எனக்கு எழுதிய கடிதத்திலும், "ஓர் அனாதை என்ற முறையில் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்று எழுதினாள். எங்கள் காதல் புனிதமானது. அவளும், நானும் மனம் விட்டுப் பேசி யிருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்காகக் காத்தி ருப்பதாகக் கூறினாள். மூன்று ஆண்டுகள் எங்கள் காதல் தொடர்ந் தது. ஆனால், திடீரென (more…)

அன்புடன் அந்தரங்கம் (24/03/13) : “மீண்டும் அவள், என் வாழ்க்கையில் குறுக்கிட்டு விடுவாளோ என பயமாக உள்ளது.”

அன்புள்ள அம்மா அவர்களுக்கு, எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு குழந் தைகள் உள்ளனர். என்கணவர், சமுதாயத்தில் அனைவரும் மதிக் கக்கூடிய ஒரு பணியில் உள்ளா ர். இந்தப்பணி என் திருமணத்தி ற்குப் பிறகுதான் அவருக்குக் கிடைத்தது. ஒரு நல்ல நிலைக்கு வந்தபின், வேறு ஊருக்கு அவரு க்கு மாற்றலாகியது. அப்போது அங்குள்ள அலுவலகத்தில் பணி புரியும் ஒரு பெண் (விதவை, 2 குழந்தைகளுக்கு தாய்) என் கண வருக்கு பலவித கடிதங்கள் எழுதி , அவரை மயக்கி விட்டாள். அவளை பார்ப்பதற்கு முன் வரை அவர், என்னைத்தவிர வேறு எந்தப் பெண்ணிடமும் அதிகம்பேசக் கூடமாட்டார். அவள் சாதா ரணமாக என் வீட்டிற்கு, மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்து என்னிடம் (more…)

அன்புடன் அந்தரங்கம் (17/03/13): “நான் உன்னை கட்டிப் போட்டா இருக்கேன், நீயாக என்னை விவாகரத்து செய்து ஓடி போ…’

அம்மா எனக்கு வயது 30. நான் பிளஸ்2, டைப்பிங் முடித்துள்ளேன். என் கணவருக்கு வயது 38. அரசு வேலை. எங்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிறது. ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். அதிபுத்திசாலி. அப்பா- அம்மா மீது மிகுந்த பாசத்துடன் இருப் பான். என் கணவருக்கு தூரத்து சொந்தமா ன அக்காவுக்கு திருமணம் ஆகி, 10 வருடங்கள் ஆகின்றன. அவருடைய கணவருக்கு வேலை இல்லை. இரண் டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்ற னர். என் கணவர் திருமணத்திற்கு முன் பிருந்தே அக்காவின் குடும்பத்துக்கும் பண உதவி செய்துள்ளார். திருமணம் முடிந்தபிறகும் உதவிசெய்தார். நானும் இதுபற்றி எதுவும் கேட்பதில்லை. என் மீதும், என் குழந்தை மீதும் பிரியமாக இருந்ததா ல், திருமணத்திற்கு பிறகு பண உதவி குறைந்தது. இதனால், ஆத்திர மடைந்த அவர் அக்கா, என்னை (more…)

அன்புடன் அந்தரங்கம் (10/03/13): “என் கழுத்தில் தாலி ஏறும்வரைதான் அவளுக்கு தடுக்க உரிமை உண்டு.

அன்புள்ளம் கொண்ட அம்மாவிற்கு — முகம் பார்த்திடாத மகளின் பிரச்னைக்கு தீர்வு அளிப்பீரா? நான் ஒரு ஆசிரியை. என் கணவரும் ஆசிரியர் தான். எனக்கு ஒரு ஆண் குழந் தை இரண்டரை வயதில் உள்ளது. மணமாகி மூன்றரை ஆண்டுகள் கூட ஆகவில்லை. இருவருக்கும் சமமான படிப்பு, பதவி இருந்தும், ஒரு பாவையின் சூதினால் நான் பாதி வழியில் பரிதவித்து நிற்கி றேன். அந்தப் பாவையும் ஒரு ஆசிரியை தான். என் கணவரும், அவரது குடும்பத்தின ரும் என்னை பெண் பார்த்து, "பூ' வைத்த பின், ஆறு மாதங்களுக்கு பிறகு தான் என் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன், என் பணி மாறுதலு க்காக அவர் அதிக முயற்சி செய்தார். அதன் பலனாக, திருமணத்துக் கு ஒரு மாதம் இருக்கையில், (more…)

அன்புடன் அந்தரங்கம் (03/03/13): – “கணவனால் கைவிடப்பட்ட பெண்க ளுக்குப் பாதுகாப்பான இடம் உண்டா?”

அன்புள்ள அக்காவிற்கு— நான் 27 வயது பெண். காதல் திருமணம் செய்து கொண்டேன். கல் லூரி காதல். டிகிரியும், டிப்ளமாவும் முடித்துள்ளேன்; என் கணவர் அரசு அலுவலர். அப்பா இல்லை. அம்மா, தம்பி, தங்கை உண்டு. அம்மா சம்மதத்துடன் திருமணம் நடைபெற் றது. சொந்தபந்தம் இல்லாமல், அடிதடிக ளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், என்னுடைய கணவர் பணப்பேய், ஊர் சுற்றுபவர், குடி காரன், சிகரட் பிடிப்பவன், ஊதாரி என்பது, கல்யாணம் முடிந்த மூன் றாவது நாள் தான் தெரிய வந்தது. அப்போதே என் அம்மா வீட்டிற்கு சென்று இருக்கலாம்; என் வீட்டு சூழ் நிலையின் காரணமாக போகவில்லை. ஊரில் அவதூறு பேசுவர். "ஆம்பளை இல்லாத (more…)

அன்புடன் அந்தரங்கம் (14/02/13): “எல்லாமே நாம் பேசுகிற விதத்திலும், இடம் கொடுக்கும் விதத்தி லும் தான் இருக்கிறது”!

அன்புள்ள அம்மாவிற்கு — நான் 25வயது பெண். படித்திருக்கிறேன். திருமணமாகி நான்கு வரு டம் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவர் கடை நடத்துகிறார். கடையில் பெரும்பா லும் நானே இருப்பேன். குழந்தைக ள்மீது அவருக்கு கொள்ளை பிரியம். நான் இல்லாமல்கூட இருப்பார்; குழந் தைகள் இல்லாமல் இருக்க மாட்டார். என்மீது அதிக பாசம் எல்லாம் கிடையாது. ஏதாவது கேட்டாலும் வாங்கித் தர மாட்டார். இருந்தாலு ம், ஏதோ பந்தத்திற்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நடத்துகிறோம். என்னைப் பொறுத்தவரை, அவர் கவுரவமானவர், பொதுசேவையில் நாட்டமுடையவர். தன்னோடுசேர்ந்து, தன் மனைவி கஷ்டப்பட்டா லும், பலனை மற்றவர்களே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இப்படி இருக்கும்போது ஆரம்பித்தது ஓர் பிரச்னை... கடந்த மூன்று வருடமாக, எங்களின் வாடிக்கையாளர் ஒருவர், என்னிடம் வந்து என்னை நேசிப்பதாகக் கூறுகிறார். முதலில் அவர் கூறியபோது அதிர்ச்சியடைந்தேன் நான
This is default text for notification bar
This is default text for notification bar