Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆன்மிக சிந்தனைகள்

நம்பியவரைக் கைவிடாதீர்! – குரான்

* இறைவனின் பார்வை மனிதனின் இதயத்தின் மீதும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மனிதன் எதைச் செய்கிறானோ, அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத்தான் இறைவன் கவனிக்கி றான். * மெய்யாக உங்கள் கையிலுள்ள பொருள்கள் பரிசுத்தமடைவதற் காகவே அல்லாமல், இறை வன் உங்கள்மீது ஜகாத்தைக் கடமையாக்கவி ல்லை. * ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழு க்கமாக நடந்து கொ ள்ளுதலே, அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தலாகும். * தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர், அநாதைப் (more…)

சகிப்புத்தன்மை: விவேகானந்தர்

மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு. நாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும். குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர். நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு. செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது. மரணத்தை வென்று, அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல். இந்த உலகில் மிருகங்களை மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும் எதிர்த்து நிற்க வேண்டும்.
This is default text for notification bar
This is default text for notification bar