Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: எந்திரன்

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்…

ஸ்ரீவித்யா தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவி யாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும்,  தளபதியில்  அம்மா வா (more…)

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் பட த்தில் நடித்ததற்காக இந்த விருது அவரு க்குக் கிடைத்துள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கல ந்து கொண்டன. அதிலிருந்து ரசிக ர்கள் தேர்வு செய்த கலைஞர் களுக்கு (more…)

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)

எந்திரன் மீது மேலும் ஒரு திருட்டு கதை புகார்!

"என் கதையான, "ரோபாட் தொழிற்சாலையை, "எந்திரன் படமாக வெளியிட்ட இயக்குனர் சங்கர் மீதும், துணையாக இருந்தவர்கள் மீதும் காப்புரிமை சட்டப்படி வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என எழுத்தாளர் ஆர்னிகா நாசர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். டைரக்டர் ஷங்கர் இயக்கிய, "எந்திரன் படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று புலனாய்வு பத்திரிகை துணை ஆசிரியரான அமுதா தமிழ்நாடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார். இந்நிலையில், எழுத்தாளர் ஆர்னிகா நாசர், நேற்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது: நான், கடந்த 25 ஆண்டுகளாக சிறுகதைகள், விஞ்ஞான கதைகள் மற்றும் நாவல்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன். கடந்த 1995ம் ஆண்டு எழுதிய, "ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல், குமுதம் குழுமத்தின் வெ

திருட்டு கதையில் உருவான எந்திரன்! பரபரப்பு புகார் – முழு விவரம்!!

எனது கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் அமுதா பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை, வேளச்சேரி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் அமுதா தமிழ்நாடன். வாரமிருமுறை வெளிவரும் புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவர், நேற்று (25ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் எழுதிய "ஜூகிபா எனும் சிறுகதை, "இனிய உதயம் எனும் பத்திரிகையில் 1996ம் ஆண்டு ஏப்ரலில் வெளிவந்தது. தொடர்ந்து 2007ம் ஆண்டில், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவந்த "திக் திக் தீபிகா என்ற புத்தகத்திலும் வெளிவந்தது. சமீபத்தில் திரைக்கு வந்த, "எந்திரன் திரைப்படத்தை பார்த்த என் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போனிலும் மற்றும் கடிதம் மூலமும், இந்த படம் என் படைப

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்

தினமணியில் வந்த முக்கியமான தலையங்கம். ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை. தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்ட

ரஜினி உற்சாகம்: எந்திரன் வெற்றி

எந்திரன் திரைப்பட வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.எந்திரன் ரசிகர்களுக்குப் பிடித்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு விடுமுறையில் செல்ல விரும்புகிறேன் என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எந்திரன்: ர‌சிக‌ர்க‌ள் ‌வியந்து பாராட்டி

ர‌ஜினியின் எந்திரன் இன்று வெளியாகியுள்ளது. துபாய் போன்ற சில வெளிநாடுகளில் நேற்றே படம் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அனிமேஷன் மற்றும் ஆ‌க்சன் காட்சிகளை வியந்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இறுதி 20 நிமிடங்கள் அருமையாக உள்ளதாக அவர்கள் தெ‌ரிவித்துள்ளனர். இந்த பாஸிடிவ் மவுத் டாக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிக‌ரித்துள்ளது. சென்னை மற்றும் புறநக‌ரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரன் வெளியாகியுள்ளது. அப்படியிருந்தும் எந்த திரையரங்கிலும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. thanks w.dunia

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்திலும் துவங்கியது. வரும் அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் எந்திரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2250 பிரிண்டுகளுடன் 3000 அரங்குகளில் திரை விருந்து படைக்கவிருக்கிறது எந்திரன். அமெரிக்காவில் நேற்று முன்தினம் எந்திரனுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் ஒருவாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில் எந்திரனுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட திரையரங்குகளில் முன்பதிவு இப்போதே ஆரம்பித்துவிட்டது. பொதுவாக ரிலீஸுக்கு மூன்று அல்லத
This is default text for notification bar
This is default text for notification bar