
ஸ்ரீராமர் சொன்ன பொய்யும் விளைவும்
ஸ்ரீராமபிரான் சொன்ன பொய்யும் அதனால் ஏற்பட்ட விளைவும்
'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
என்று கூறுகிறது வான் புகழ் வள்ளுவம்.
ஆமாம்! எந்த உயிருக்கும் தீமை தராத சொல்லே உண்மையாகும் என்று நமது புராணங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன. ஓர் உயிரைக் காப்பாற்றச் சொல்லப்படும் பொய் உண்மையைவிட மேலானது.
தன்னைச் சரணடைந்த மானை ஒளியச் சொல்லிவிட்டு, வேடனிடம் பொய் சொன்ன முனிவர் எந்தவிதத் தண்டனையும் பெறவில்லை என்று புராணத்தில் நாம் படித்திருந்தாலும்கூட, வாய்மை என்பது எந்த நாளும் கைவிடக் கூடாத நல்ல நெறி. பிற உயிரைக் காக்கும் பொருட்டு சொல்வது பொய்யாக இருந்தாலும், அது மன்னிக்கப்படக் கூடியதே. மற்றபடி பொய் சொல்லக் கூடாது என்பதுதான் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி. மனிதர்களே பொய் சொல்லக்கூடாது என்ற நிலையில், தெய்வாம்சமான ஸ்ரீராமர் பொய்யுரைத்தது எப்படிச் சரியாகும்?
என