Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க

"கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க " என்னது கொரோனாவுக்கு நன்றி சொல்லனுமா, ஏன்யா, உலகமே கொரோனாவை கண்டு அலறி, பதறித் துடித்துக் கொண்டு, அந்த வைரஸை உலகத்தைவிட்டே விரட்ட போராடிக் கொண்டிருக்கும் போது நீங்க என்னடானா கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க என்று சொல்வது நியாயமா? மனசாட்சி இருக்காயா உங்களுக்கு என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் கண்டிப்பாக ஆமாம்ப்பா சொல்வது சரிதான் என்று சொல்வீங்க. அந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற பெயர் கொண்ட‌ நுண்ணுயிரால் இன்று உலகம் முழுக்க இயற்கை தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டு வருவதோடு, மனிதர்களுக்கு அவரவர்களின் உறவுகளின் உன்னதங்களை உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயற்கை மனிதர்களுக்கு ஒரு தனிமையை உருவாக்கி, வீட்டில் முடக்கிப்போட்டு ‘இந்த குடும்பம்தான் உனது உலகம்’ என்ற உண்மையை புரிய வைத்
கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் –  இஸ்ரேல் அதிரடி

கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் – இஸ்ரேல் அதிரடி

கொரோனாவை அழிக்கும் எதிர்ப்பு மருந்து தயார் - இஸ்ரேல் அதிரடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகன் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 212 நாடுகளுக்கு பரவியுள்ளது. கிட்டத் தட்ட உலகம் முழுவதும் 36 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசை அழிக்கும் எதிர்ப்பு மருந்தை கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்து மிகப்பெரிய திருப்பு முனை எனவும் இது ஒரு அற்புதமான சாதனை எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இது குறித்து இஸ்ர
அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்

அலறித்துடிக்கும் அமெரிக்கா – மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள்

அலறித்துடிக்கும் அமெரிக்கா - மரண‌ பீதியில் உறையும் மக்க‍ள் உலகத்தில் உள்ள மொத்த நாடுகளில் சுமார் 210 நாடுகளில் கொரோனா எனும் கொடூர வைரஸ் பரவி, மனித உயிரிழப்புகளையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தி வருவது. எதற்கெடுத்தாலும் தோள் உயர்த்தும் ஆளாளப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகள் இந்த கொரோனா வைரஸால் அலறிக் கொண்டிருக்கின்றன‌. முதன்முதலில் சீனாவில் கண்டு அறிய‌ப்பட்ட இந்த வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து, மற்றும் குணப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டு அறிய மருத்துவ‌ விஞ்ஞானிகள் தீவிரமாக‌ முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது வரை அந்த முயற்சிகளில் எள்ள்ள‍வு கூட முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பது வேதனைக்குரியதே. இன்றைய தேதி வரை கண
கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.1 கோடி- திமுக கூட்டணி தீர்மானம்

கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.1 கோடி- திமுக கூட்டணி தீர்மானம்

கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.1 கோடி- திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம் மத்திய - மாநில அரசுகளின் கொரோனா வைரஸ் தொடர்பாக அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் கொரோனா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதோடு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் தேவைகள், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கொரோனா தடுப்புப் ப
கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை

கொரோனா ஊரடங்கு – ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை

கொரோனா ஊரடங்கு - ஏப்ரல் 14க்கு பிறகும் நீட்டிக்க மத்திய அரசு ஆலோசனை இன்று உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பேர் பாதிப்படைந்திருப்பதும், இறப்பதுமாக இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்கள் ஊரடங்கு குறித்து என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியதாக நேற்று கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் – முதல்வர் பழனிச்சாமி பேட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 67 பேர் - முதல்வர் பழனிச்சாமி பேட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று ஏற்பட்டு மொத்தம் 67 ஆக உயர்ந்துள்ளது. ஆயினும் தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளில் 5 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் 25 லட்சம் M-95 முகக் கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு
கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை

கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை

கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் - நடிகை கடும் எச்சரிக்கை “நாம் இயற்கைக்கு விரோதமாக வாழ்கிறோம். அதனால்தான் கொரோனா வைரஸ் போன்றவை வருகின்றன. இப்போது நாம் போலீஸ், டாக்டர் ஆகியோர் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும். அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடக்க வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இப்போதுள்ள நிலைமையை யோசித்து பார்த்தால் எவ்வளவு அவசியம் என்று புரியும். வீட்டில் இருந்து புத்தகங்கள் படியுங்கள். அல்லது சினிமா பாருங்கள். எல்லோரும் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் ஒழுங்காக இருக்க வேண்டும். மற்றவர்கள் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும். கொரோனா வைரசை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் மரணங்கள் எண்ணிக்கை அதிகமாகிவிடும். எனவே ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்”. இவ்வாறு சார்மி கூறியுள்ளார். கொரோனா விழிப்புணர்வு
This is default text for notification bar
This is default text for notification bar