Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சத்திய சாய்பாபா

யாரையும் பயமுறுத்தாதே! – சாய்பாபா

பல்புகள் வேறானாலும் அவற்றில் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப் போல் நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவை யெல்லாம் வேறு வேறாயினும், ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்து மக்களுக்கும்  ஒன்றேயாகும். * சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன். சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சு, மற்றவர்களது உணர்ச்சிகளையும் தூண்டி விடுவதாக அமையக்கூடாது. * அநியாயம், பொய்மை, அதர்மம் இவற்றால் குழப்பப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குணநலன்களை மீட்டு வந்து நிலைநாட்ட இளைஞர்களால் மட்டுமே முடியும். * பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும், ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். * மனிதர்கள் பயப்படக்கூடாது. "நானும் பயப்பட மாட்டேன், பிறரையும் பயப்படச் செய்யமாட்டேன்' என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
This is default text for notification bar
This is default text for notification bar