Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நம் உரத்த சிந்தனை இதழ்

தேசம் நம் சுவாசம் – இது தலையங்கம் அல்ல‍! ராணுவத்திற்கு போர்வாள், அரசியல்வாதிகளுக்கு குத்தூசி!

மே 2013  (இந்த) மே மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எப்பொழுதாவது நாம் ஏமாந்த சமயத்தில் வாலாட்டிக் கொண் டிருந்த சீனா. . . இப்பொழுதெல்லாம் நாம் விழித்துக் கொண்டிருக்கும் போதே அடிக்கடை மூக்கை நுழைத்துத் தனது முழு உடலை யும் இந்தியாவிற்குள் நுழைக்கின் றது. அண்மையில் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன வீரர்கள் சிலர் கூடாரம் அமைத்து ஹே. . . ஹே. . . நான் உள்ளே வந்துட்டேன். பார் த்தாயா... இப்ப‍ என்ன‍ பண்ணு வே... என்று கும்மியடித்துக் கொ ண்டிருக்கிறார்கள். உள்ளே நுழையும் வரை பார்த்திருந்து விட்டு (more…)

மாற்ற‍ம் தரும் மாற்ற‍ம்! – இது தலையங்கம் அல்ல‍! ‘போர்வாளை கூர் தீட்டும் உரைகல்!

ஏப்ரல் 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் இலங்கையில் இன்ன‍லுறும் நம் தமிழர்களுக்காக கல்லூரி மாணவ மாணவியர் அறப்போராட்ட‍த்தில் இறங்கியிருப்ப‍து அரசியல் கட்சிகளே எதிர்பாராத அதிரடித்திருப்ப‍ம். ஆனால், மாணவ சக்தியை தங்களது வாக்கு வங்கிக்காக வளைத்துப்போடும் நோக்க‍த்தி ல் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்கியதும், விகடன் போ ன்ற மூத்த‍ பத்திரிகைகள் கூட தேசமெங்கும் போராட்ட‍ம் தொடர வேண்டும் என்று எழுதியதும், ஊடகங்கள் ஒவ்வொன்றும் இதை வணிகப்படுத்த‍ முயற்சித் த‍தும், எங்கே இந்தப்போராட்ட‍ம் (more…)

பொறுப்பும் வெறுப்பும் – (தற்போதைய சூழ்நிலையை அப்ப‍டியே தோலுரித்துக்காட்டும் தலையங்கம்)

மார்ச் 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் நாடாளுமன்றம் என்பது தேச மக்க‍ளின் இதயத் துடிப்பு, ஆட்சியின் நாடிப்பிடிப்பு, தேசத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக் கணிப்பு. இந்த நோக்க‍ங்கள் அனைத்தும் இப்போது அடியோடு தொலைந்து போய் விட்ட‍ன• ஒத்தி வைப்ப‍தற்காகவே கூட்ட‍ப்படு ம் நாடாளுமன்றம் உலகிலேயே இந்திய நாடாளுமன்றம்தான். கடந்த இரண்டா ண்டுகளில் நடைபெற்ற‍ அத்த‍ னை நாடாளுமன்றக் கூட்ட‍ த்தொடர்களும் கூச்ச‍ல், கலாட்டா, கைகலப்பு என்று யுத்த‍க் களமாகவே மாறியது ஜன நாயகத்தின் அவலமில்லையா? கூத்த‍டிக்க‍த்தான் கூட்ட‍த் தொடர் என்றால், (more…)

மோதி மிதிப்போம்! – (இது தலையங்கமல்ல‍! எதிரிகளை பந்தாடும் போர்வாள்)

பிப்ரவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எந்தவித எல்லையே இல் லாமல் போய்விட்ட‍து. நமது எல்லைக்குள் புகுந்து இரண்டு ராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல் லாமல், அதில், ஒரு வீரரின் தலை யைச் சீவி தூக்கி எறிந்து பாகிஸ் தான் ராணுவம் அராஜகம் செய்திரு க்கிறது. இதைவிட கொடுமை என்ன‍வென் றால், பாகிஸ்தான் தீவிரவாதியா ன அமீஸ் சையது என்பவன், இந்தியா வை பயங்கரவாத நாடாக அறிவிக் க‍ வேண்டும் என்று தைரியமாக அறிக்கை விடுகிறான். அதற்கு நாம் நெற்றியடி தந்திருக்க‍ வேண்டா மா? மாறாக (more…)

பாதக பூமி . . . – அனல் கக்கும் “தலையங்கம்”

ஜ‌னவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த “அனல் கக்கும்” தலையங்கம் பாரத பூமி பழம்பெறும் பூமி நீரதன் புதல்வர் என்று பெருமிதத்துடன் நெஞ்சு நிமிர்த்திப் பாடிய பாரதி, இன்று உயிரோடி ருந்திருந்தால், பாரதபூமி பாதக பூமி பாவிகள் நீவிர் இந் நிலை மாற்றுவீர்! என்று வேதனையுடன் பாடி வெட்கித் தலைக்குனிந்திருப்பார். புதி தில்லியில் நடைபெற்ற‍ வன்புணர்ச்சி சம்பவம் பாரதத் தாய்க்கு நேர்ந்த பெருத்த தேசிய அவமானம்! மாகாபாரதத்தில் பாஞ்சாலி துகில் உரிக்க‍ப்படவில்லையா? இதிகாச ங்களிலும் புராணங்களிலு ம் பெண்களு க்கு பாலியல் கொடுமை நேர்ந்ததே இல் லையா? இதுவரை இந்தியாவில் பலாத் கார சம்பவங்கள் நடைபெறவேயில்லை யா? பின் ஏன் இப்போது இந்த புது தில்லி விவகாரம் மட்டும் பெரிதாய் (more…)

அதர்மபுரி . . .

டிசம்பர் 2012  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த "சூடான" தலையங்கம்  தர்மபுரிக்கு அருகில் அண்மையில் வெடித்த‍ சாதிக் கலவரம், காட்டு மிராண்டித்தனமானது. கண்டிக் க‍த்தக்க‍து. கலப்புத் திருமணத் திற்கு தங்கப்பதக்க‍ம் கொடுத்த‍ இந்த தமிழகம், இன்று காதலுக் காக கலவரப் பூமியாகியிருக்கிறது. சாதிக ள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி யை கம்பீரத் தோடு தலை நிமிர்ந்து பார்த்த‍ நாம் இன்று சாதி வெறியின் உச்ச‍த்தை கண்டு தலைகுனிந்து நிற்க வேண்டியிருக் கிறது. பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் ஊர் சடங்குகளிலும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வெள்ள‍ந்தியாக கூடி மகிழ்ந்த எம்ம‍க்க‍ளை வெட்ட‍ரிவாளுடனும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar