
கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு
கடாயில் பாலை ஊற்றி துருவிய கேரட்டை அதில் போட்டு
முதலில் கேரட் இரண்டை எடுத்து அவற்றின் தோலுரித்து, நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்புக்களை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 1/2 கப் பாலை ஊற்றி துருவி வைத்திருக்கும் கேரட்டை அதில் போட்டு வேக வைக்க வேண்டும். விடவும். பால் நன்றாக வற்றும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கேரட் நன்றாக வெந்ததும் அதில் 1/2 சர்க்கரையும், கொஞ்சம் கேசரி கலரும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சர்க்கரை கரைந்து நன்கு சுருள வதங்கியதும் மீதமுள்ள நெய்யை சேர்த்து ஒரு நிமிடம் விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் பொன்னிறமாக வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்க