
சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா?
சட்டம் படிக்காத ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியுமா?
நீதிமன்றத்தில் உங்கள் வழக்கில் நீங்களே உங்களுக்காக நின்று வாதாடுவது என்பது இந்திய அரசமைப்பு உங்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அடிப்படை உரிமை என்பது எதையும் யாரிடமும் கேட்காமல் நமக்கு நாமே எடுத்துக் கொள்வதாகும்.
உதாரணத்திற்கு… உங்கள் அப்பா அம்மாவுடன் பேச வேண்டும் எனக் கருதுகிறீர்கள் அல்லது இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் உங்களின் எண்ணபடி அப்பா அம்மாவுடன் பேசுகிறீர்கள் அல்லது இந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்படி செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி கேட்கிறீர்களா? இல்லைதானே இது தான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பது.
உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு போகிறீர்கள். அல்லது கலெக்டரை பார்த்து உங்களுக்கு தேவையான கோரிக்கையை வைக்க போகிறீர்கள். இதற்காக வக்கீல்