
கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் – ஓரலசல்
கொரோனாவும் பிளாஸ்மா சிகிச்சையும் - ஓரலசல்
கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை குறித்து ஒரு சிறு அலசல்.
கடந்த 100 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை என்பது வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் இருந்து பெறப்படும் நோய் எதிர்ப்பு அணுக்கள் சிகிச்சை முறையேயாகும். கொடூர கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்றாக குணம் அடைந்தவர்களின் உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் பி.லிம்போ சைட் செல்களில் ஒருவித நோய் எதிர்ப்பு சக்தி திரவம் சுரக்கும். அந்த திரவத்தை தனியாக பிரித்து எடுத்தால் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் அணுக்கள் கிடைக்கும்.
வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட ஒவ்வொருவரிடம் இருந்தும் தலா 800 மில்லி ல