
இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி
இந்திமொழியைப் பாதுகாக்கத் தமிழ் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது- பின்னணி
தமிழை இரண்டாம் மொழியாக ஹரியானா அப்போது அறிவித்ததன் பின்னணி இதுதான்! ஹரியானாவில் 20,000-க்கும் குறைவான தமிழர்களே வசிக்கின்றனர். ஆனாலும், அந்த மாநிலத்தின் முதல்வர் தமிழர்களைக் கண்டால் தமிழில் உரையாடுகிறார், மேடையில், தமிழில் பேசுகிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்தானே!
ஏதாவது ஒரு வழியில் தமிழகத்தில் இந்தியைத் திணிப்பது காலம் காலமாக நடந்துவரும் விஷயம்! சமீபத்தில் கூட உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஒரே மொழியாக இந்தி திகழ வேண்டுமென்று கருத்துக்கூறி பலத்த எதிர்ப்பு கிளம்ப `அதாவது நான் என்ன சொன்னேன்னா…’ என மழுப்பினார். ஆனால், இந்தி மொழியைக் காப்பதற்காகத் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவித்த கதை ஒன்று 40 ஆண்டுகளுக்கு முன் வட மாநிலத்தில் நடந்துள்ளது.
அந்த மாநிலம் ஹரியானா. இத்தனைக்கும் ஹரியானாவில் 20,000-