Friday, June 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Pattinathar

மரணத் தருவாயில், ஒரு மனிதனுக்கு தெளிவு வரும்போது அவன் புலம்புவது எப்படி தெரியுமா?

மரணத் தருவாயில், ஒரு மனிதனுக்கு தெளிவு வந்தால் அவன் எப்ப‍டி புலம்புவான்? என்பதை பட்டினத்தார் தனது பாடலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பாடலை (more…)

இளமை காலத்தில் பட்டினத்தார்

திரை கடலோடித் திரவியம் தேடும் மூன் றாம் வருணத்தவரான வணிகர்கள் மர பில் நான் ஒருவன். பூம்புகார்ச் சோழர்களும் சரி, பிற சோழர்க ளும் சரி, தாங்கள் முடி சூட்டிக் கொள்ளும் போது வணிகர்களிலேயே மிகப் பெரிய தனவந்தராக இருப்பவர் தான் அந்த மகுட த்தை எடுத்துக் கொடுக்க வேண்டும். ஏறக் குறைய மூன்று தலைமுறைகளாக நாங்க ளே மகுடங்களை எடுத்துத் தந்திருக்கி றோம் என்பதிலிருந்து எத்தனை தலை முறைகளாக எங்கள் குடும்பம், செல்வம் நிறைந்ததென்று நீங்கள் கண்டு கொள்ள லாம். என் தந்தை பெயர் சிவநேசன் செட்டியார். தாய் ஞானகலை ஆச்சி. நான் பிறந்ததும் என் கழுத்திலும் கை கால்களிலும் ஆடிய தங்க நகைகளைப் போலவே, நான் (more…)

இறைவன், பட்டினத்தாரிடம் நடத்திய லீலை

ஒரு வயோதிக பிராமணரும், அவர் மனைவியும் எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்காருகிறார்கள். கால், கைகள் கழுவுவதற்காக ஒரு செப்புக் கலயத்தில் தண்ணீரோடு வந்த நான், அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கி றேன். "ஆமாம் சுவாமி நான்தான் அது... என்ன வேண்டும்,'' என்கிறேன். "எங்களுக்கு ஒன்றும் வேண்டாமப்பா, எங் கள் குழந்தையைக் காப்பாற்று'' என்கிறார் கள். அப்படிச் சொன்னார்களே தவிர, அவர்கள் கைகளிலே குழந்தை இல்லை. "எங்கிருந்து வரு (more…)

ஈசனின் சொரூபங்கள்!

பகவத் தியானத்தில் ஈடுபட்டவர்கள், கண்ணை மூடி மவுனமாக தியானம் செய்வர். கண்ணை திறந்து கொண்டிருந்தால், பல விஷயங்களை பார்க்க தூண்டும்; அதனால், தியானம் கலையும். அதேபோல வாய், மூக்கு, அங்கங்கள் மூலமாகவும் தியானத்துக்கு பங்கம் ஏற்படலாம்.  தியானத்துக்கு தனிமை முக்கியம். இப் படி புலன்களை அடக்கி, தியானம், தவம் செய்பவர்களை ஞானிகள் என்று அழைப்பர். அஞ்ஞானத்தில் உழல்பவர்களுக்கு இடையே செல்வ செழிப்பு, ஏழ்மை, வறுமை, மேலான பிறவி, இழிந்த பிறவி போன்ற வேற்றுமைகள் இருக்கும்.  தியானத்தில் ஈடுபட்டு, சமாதி நிலையில் உள்ளவர்கள், இது போன்ற மாயாபேதங்களை உணர மாட்டார்கள். இந்த நிலையில் குறைபாடு ஏற்பட்டால், அதற்கு காரணம் மனம் தான். இந்த சக்தி, சிவசக்தியால் நடைபெறுகிறது. எட்டு போன்ற சொல் அஷ்டமூர்த்தியை குறிக்கும். நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இந்த எட்டு ஜட வஸ்துகளும் ஈசனுடைய சொ

தேனீயைப் பாருங்கள் – பட்டினத்தார்

மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள். ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும் போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை. ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும் போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள். தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும
This is default text for notification bar
This is default text for notification bar