தூத்துக்குடி- கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்க வசதியாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடப்பதாக துறைமுக துணைத்தலைவர் சுப்பையா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: துறைமுகத்திற்குள் கிரீன் கேட் மற்றும் புளுகேட் இடைப்பட்ட பகுதியில், 1.5 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே கட்டப்பட்ட கப்பல் பயணிகளுக்கான அறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு, ஒரே நேரத்தில் 300 முதல் 400 பேர் வரை அமரலாம். கப்பல்போக்குவரத்து அறைக்கான தளம் அமைக்கும் பணி முடிந்துவிட்டது. இந்த கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக செயல்பட்டு வருகிறோம். கப்பலில் வரும் பயணிகள் தூத்துக்குடி நகருக்குள் செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். கப்பலில் செல்லும் பயணிகளை ஏற்ற வருவோரின், கார்களை பார்க்கிங் செய்ய தனியாக இடமளிக்கப்படும்.
கப்பல் போக்குவரத்து தொடர்பா